Thursday, May 1, 2014

உழைப்பாளர் தினம்



அன்று உள் நாட்டு முதலாளிகளுக்கு
கொத்தடிமைகளாக
உடலை உருக்கி
உரிமைகளை இழந்து - உழைத்தோம்

காலம் மாறியது
கலாச்சாரம் மாறியது
உணவு பழக்கம் மாறியது
ஆடை மாறியது
ஆட்சி மாறியது  - ஆனால்
எங்கள் அடிமைத்தனம்
தொடர்கிறது - இன்றும்
பன்னாட்டு  முதலாளிகளுக்கு
கொத்தடிமைகளாக
உறவுகளை மறந்து
உணர்வுகளை மறந்து 
மனிதத்தை மறந்து -தினமும்
உழைத்துகொண்டு இருக்கின்றோம் - என்று 
மாறும் எங்கள் அடிமை வாழ்வு - எப்பொழுது
கிடைக்கும் உழைப்புக்கு இணையான தகுதி.