Wednesday, October 16, 2013

காரணம் - என்னவோ ?


உலக மக்கள் பேச தொடங்குவதற்கு முன்
மொழிக்கு இலக்கணம்  வகுத்த - தமிழ்
இன்று பொலிவிழந்து நிற்க காரணம் - என்னவோ ?

பொறியல் முன்னேற்றம் இல்லாத காலத்தில்
மிகப்பெரிய கல்லணை கட்டிய - இடத்தில்
அரசு கட்டடம் உடைந்து போக காரணம் - என்னவோ ?

கட்டட கலைக்கு சான்றாக  ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்  கட்டிய கோவில்கள் கம்பீரமாக நிற்க
எம் மக்கள்  குடிசையில் வாழும் காரணம் - என்னவோ ?

அறிவியல் அறிவு இல்லாத காலத்தில் நவ கிரகங்களை
கண்டுபிடித்த ஞானிகள் பிறந்த மண்ணில் -சுகாதார
சீர் கேடுகள் நிறைந்து கிடக்க காரணம் - என்னவோ ?

பசு கன்றுக்கு நீதி கிடைக்க தன மகனை கொன்ற
மன்னன் வாழ்ந்த நாட்டில் - அரசியல் வாதிகளுக்காக
நீதி விற்கப்பட காரணம் - என்னவோ ?

புலியை முறத்தால் அடித்து  விரட்டிய வீர மக்கள்
வாழும்  ஊரில் ஒலிம்பிக்கில் -ஒரு பதக்கத்திற்காக
ஏங்கி  நிற்கும் காரணம் - என்னவோ ?

போக்குவரத்து இல்லாத நேரத்தில் ரோமாபுரிக்கு
வணிகம் செய்தவர்கள் வாழ்ந்த நாட்டில் -அந்நிய
பொருள்களுக்கு அடிமைப்பட்டு கிடக்க காரணம் - என்னவோ ?

கடல் கடந்து மலை கடந்து வெற்றி பெற்ற
 நாடுகளை வளைத்த வீர மறவர்கள் வாழ்ந்த - நாட்டில்
சொந்த மண்ணில் தோற்ற காரணம் - என்னவோ ?

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்த குடி – தமிழ் மொழியை
எம் மக்கள்  பேச மறுக்க காரணம் - என்னவோ ?

Wednesday, October 2, 2013

குறுகிய வாழ்க்கை


காலம் வேகமாக கடந்து செல்கிறது
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான
பயணத்தில் ஓடிக்கொண்டு  இருக்கின்றோம்
மரணம் எப்படியும் நேரிடலாம்

வறியவர்களிடம் வஞ்சகம் செய்யாதே
பாமரர்களிடம்  சுரண்டி தின்னாதே
எளியவரிடம்  கவுரவும் பார்க்காதே
பெண்களிடம் வன்கொடுமையில் ஈடுபடாதே

அன்பு என்னும் தேன் வேண்டுமா?
மகிழ்வு  என்னும்  கனி வேண்டுமா?
உறவு என்னும் பால் வேண்டுமா?
அனைத்தையும் அள்ளி பருகு

உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது
மரணம் நெருங்கி கொண்டிருக்கிறது
இடைக்காலத்தை போலியாக கழிக்காதே
மற்றவர்களை பற்றி புரணி பேசாதே

மனித நேய மான்பு செய்வோம்
பெருமை கொள்வோம்!
பொய்யர்களிடம் ஒதுங்கி நிற்ப்போம்
போலிகளை பொறமை கொள்ள வைப்போம்

அறம் செய்வோம், நாம் அனுபவிப்போம்!
உதவி செய்வோம், வாரி வழங்குவோம்!!
அடுத்தவர்களிடம் இருந்து உயர்ந்து இருப்போம் !!!
வாழ்வை மகிழ்வாக களிப்போம் !!!!