Tuesday, December 10, 2013

கருப்பு வைரத்துக்கு கண்ணீர் அஞ்சலி


இருண்ட கண்டத்தில் உதித்த -உதய சூரியனே
இரும்புத்திரையை உடைத்தெழுந்த கதிரே!

பழங்குடி இனத்தில் பிறந்த -பகலவனே
பலமான நிற வெறியர்களை  சுட்டெரித்த சுடரே!

அடிமையின் இருளை அகற்ற வந்த-அகல் விளக்கே
அகங்கார வெள்ள இனத்தை கருக்கிய நெருப்பே

அறப் போராட்டத்தில்   தொடங்கி
ஆயுதப் போராட்டத் தலைவனாக நின்றவன் நீ!

தன்  இன மக்கள் விடுதலைக்காக - சிறையில்
தன்னையே உருக்கிகொண்ட மெழுகுவர்த்தி நீ!

மன்னிப்பை கேட்டு விடுதலை பெறுவதை விட
மரணமே போதும் என்ற மன உறுதியாளன்  நீ!

உலக தலைவர்களுக்கெல்லாம்
உன்னத தலைவன் நீ !

உலக  போராளிகளுக்கெல்லாம்
உதாரணம் நீ !

பூர்விக குடியின் புதல்வன் நீ !
பூலோகமே போற்றும் கருப்பு வைரம் நீ !

அமைதியின் வடிவம் நீ !
அன்பின் தோற்றம் நீ !

உன்னைக் கட்டித்தழுவத் துடிக்கின்றோம்.
என்ன செய்வது எங்களை விட்டு பிரிந்து விட்டாய்  நீ!

மேகங்களிடம் எங்கள் கண்ணீரை காணிக்கையாக
அனுப்பியுள்ளோம் பெற்றுக்கொள்!!.

Monday, December 9, 2013

டெல்லி மக்களுக்கு ஒரு சலாம்!


ஓட்டுக்கு பணம் இல்லை
மது விருந்து  இல்லை

அரசியல் பின்புலம் இல்லை
சினிமா மாயா கவர்ச்சி இல்லை

இலவசங்கள் இல்லை
பிரித்தாலும் சூழ்ச்சி இல்லை

சாதியம் இல்லை
மத வெறி இல்லை

ஊழலுக்கு எதிரான உணர்வு இருந்தது
உண்மை மீதான தாகம் இருந்தது

ஏழைகளின்  ஆதரவு இருந்தது
இளைஞர்களின்  உழைப்பு  இருந்தது

மாணவர்களிடம் எழுர்ச்சி இருந்தது
மக்களிடம் உணர்ச்சி இருந்தது

கையில் துடைப்பம் இருந்தது
அரசியல் குப்பைகளை துடைக்க

ஓட்டு  இயந்திரத்தில் துடைப்பம் இருந்தது
உணர்வாளர்களின் என்னத்தை வெளிப்படுத்த

உணர்வுக்கு உயிர் கொடுத்து
இந்திய மக்களுக்கு அறிவின்
எடுத்து காட்டாய் திகழ்ந்த
டெல்லி மக்களுக்கு நன்றி

இதற்க்கு ஆதாரமாய் விளங்கிய
அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஒரு சலாம்!

Thursday, November 21, 2013

ஒப்புக்கு ஒன்று


பல்லாயிர கணக்கான மரங்களை வெட்டி
விவசாய நிலங்களை அபகரித்து
அனைத்திற்கும் ஆதாரமான குளங்களை அழித்து
சிறப்பு பொருளாதார மண்டலங்கள் அமைத்து
பன்னாட்டு நிறுவங்களை அனுமதித்தது - அரசு

"தாளை சேமியுங்கள் மரத்தை பாதுகாப்போம் "
அலுவலகம் முழுவதும் விளம்பர தாள் ஒட்டி
"Go GREEN SAVE PAPPER SAVE TREE" -என்று
அறிவு பூர்வமான புள்ளி விபரத்தோடு பேசுவோம்!
பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் – நாங்கள்

Saturday, November 16, 2013

கலவை


பல மென்மையான  இதழ்கள் ஒன்று சேர்ந்து
மணம்  உருவான கலவை ஒரு - பூ

பல மனமுடைய  பூக்கள் ஒன்று சேர்ந்து
வடிவம் உருவான கலவை ஒரு - செடி

பல வடிவமான  செடிகள்  ஒன்று சேர்ந்து
அழகு  உருவான கலவை ஒரு - தோட்டம்

பல அழகான  பண்புகள்   ஒன்று சேர்ந்து
அன்பே உருவான கலவை ஒரு - அம்மா 

Wednesday, November 6, 2013

ஆலயம்


விண்ணை முட்டும் கோபுரங்கள்
மனதில் வினைகள்

பக்தி ஊட்டும்  மறையுரைகள்
வெளியே பொய்யுரைகள்

பரவசம் மூட்டும் பாடல்கள்
கொடூர எண்ணங்கள்

சேவை பற்றி போதனைகள்
வியாபார நோக்கங்கள்

அன்பை வெளிபடுத்தும் வார்த்தைகள்
அருவருப்பான செயல்கள்

கடவுளே உன் ஆலயத்தின்
புனிதம் இதுதானா இன்னும்
நீ மௌனம் காப்பது ஏன்?

Wednesday, October 16, 2013

காரணம் - என்னவோ ?


உலக மக்கள் பேச தொடங்குவதற்கு முன்
மொழிக்கு இலக்கணம்  வகுத்த - தமிழ்
இன்று பொலிவிழந்து நிற்க காரணம் - என்னவோ ?

பொறியல் முன்னேற்றம் இல்லாத காலத்தில்
மிகப்பெரிய கல்லணை கட்டிய - இடத்தில்
அரசு கட்டடம் உடைந்து போக காரணம் - என்னவோ ?

கட்டட கலைக்கு சான்றாக  ஆயிரம் ஆண்டுகளுக்கு
முன்  கட்டிய கோவில்கள் கம்பீரமாக நிற்க
எம் மக்கள்  குடிசையில் வாழும் காரணம் - என்னவோ ?

அறிவியல் அறிவு இல்லாத காலத்தில் நவ கிரகங்களை
கண்டுபிடித்த ஞானிகள் பிறந்த மண்ணில் -சுகாதார
சீர் கேடுகள் நிறைந்து கிடக்க காரணம் - என்னவோ ?

பசு கன்றுக்கு நீதி கிடைக்க தன மகனை கொன்ற
மன்னன் வாழ்ந்த நாட்டில் - அரசியல் வாதிகளுக்காக
நீதி விற்கப்பட காரணம் - என்னவோ ?

புலியை முறத்தால் அடித்து  விரட்டிய வீர மக்கள்
வாழும்  ஊரில் ஒலிம்பிக்கில் -ஒரு பதக்கத்திற்காக
ஏங்கி  நிற்கும் காரணம் - என்னவோ ?

போக்குவரத்து இல்லாத நேரத்தில் ரோமாபுரிக்கு
வணிகம் செய்தவர்கள் வாழ்ந்த நாட்டில் -அந்நிய
பொருள்களுக்கு அடிமைப்பட்டு கிடக்க காரணம் - என்னவோ ?

கடல் கடந்து மலை கடந்து வெற்றி பெற்ற
 நாடுகளை வளைத்த வீர மறவர்கள் வாழ்ந்த - நாட்டில்
சொந்த மண்ணில் தோற்ற காரணம் - என்னவோ ?

கல் தோன்றி மண் தோன்றா காலத்தே
முன் தோன்றிய மூத்த குடி – தமிழ் மொழியை
எம் மக்கள்  பேச மறுக்க காரணம் - என்னவோ ?

Wednesday, October 2, 2013

குறுகிய வாழ்க்கை


காலம் வேகமாக கடந்து செல்கிறது
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான
பயணத்தில் ஓடிக்கொண்டு  இருக்கின்றோம்
மரணம் எப்படியும் நேரிடலாம்

வறியவர்களிடம் வஞ்சகம் செய்யாதே
பாமரர்களிடம்  சுரண்டி தின்னாதே
எளியவரிடம்  கவுரவும் பார்க்காதே
பெண்களிடம் வன்கொடுமையில் ஈடுபடாதே

அன்பு என்னும் தேன் வேண்டுமா?
மகிழ்வு  என்னும்  கனி வேண்டுமா?
உறவு என்னும் பால் வேண்டுமா?
அனைத்தையும் அள்ளி பருகு

உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது
மரணம் நெருங்கி கொண்டிருக்கிறது
இடைக்காலத்தை போலியாக கழிக்காதே
மற்றவர்களை பற்றி புரணி பேசாதே

மனித நேய மான்பு செய்வோம்
பெருமை கொள்வோம்!
பொய்யர்களிடம் ஒதுங்கி நிற்ப்போம்
போலிகளை பொறமை கொள்ள வைப்போம்

அறம் செய்வோம், நாம் அனுபவிப்போம்!
உதவி செய்வோம், வாரி வழங்குவோம்!!
அடுத்தவர்களிடம் இருந்து உயர்ந்து இருப்போம் !!!
வாழ்வை மகிழ்வாக களிப்போம் !!!!

Friday, September 27, 2013

என் கணிதம்


கருணை  பொறுமை என்ற
நன்மைகளை - கூட்டினேன் (+)

பொறாமை  வஞ்சகம் என்ற
தீய பழக்கத்தை - கழித்தேன் (-)

கல்வி தொண்டு என்ற
இலட்சியங்களை    - பெருக்கினேன் (*)

பகிர்வு  நேர்மை என்ற
நல்லொழுக்கத்தை  - வகுத்தேன்(/)

வெற்றி  தோல்வி  என்ற
நிகழ்வுகளை ஏற்றுகொண்டேன்  - சமமாக(=)

வாழ்க்கை  கணக்கினை பிழையில்லாமல்  தீர்த்திட
அன்பு   என்னும் சூத்திரம் செய்து
கணக்கில்லா வளர்ச்சியை பெற்றிட்டேன்!

Thursday, September 19, 2013

கூட்டம்



மத தலைவர்களுக்காக கூடிய கூட்டம்
மக்களுக்காக கூடியிருந்தால் - இன்று
மனித நேயம் பிறந்திருக்கும்

கோவில்களுக்காக கூடிய கூட்டம்
கல்விக்காக கூடியிருந்தால் - இன்று
கருத்து பிறந்திருக்கும்

கடவுளுக்காக கூடிய கூட்டம்
காயபட்டவர்களுக்காக கூடியிருந்தால் - இன்று
கருணை பிறந்திருக்கும்

சாமியார்களுக்காக கூடிய கூட்டம்
சாமானிய மக்களுக்காக கூடியிருந்தால் - இன்று
சமதர்மம் பிறந்திருக்கும்

சாதி தலைவர்களுக்காக கூடிய கூட்டம்
சமூகத்திற்காக கூடியிருந்தால் - இன்று
சமத்துவம் பிறந்திருக்கும்

நடிகர்களுக்காக கூடிய கூட்டம்
நாட்டுக்காக கூடியிருந்தால் - இன்று
நன்மை பிறந்திருக்கும்

பணத்திற்காக கூடிய கூட்டம்
படிப்பதற்கு கூடியிருந்தால் - இன்று
பண்பு பிறந்திருக்கும்

சிலைகளுக்காக கூடிய கூட்டம்
சீரமைப்புகளுக்கு கூடியிருந்தால் - இன்று
சுத்தம் பிறந்திருக்கும்

கேளிக்கைகளுக்காக கூடிய கூட்டம்
கேள்வி கேட்ட்க கூடியிருந்தால் - இன்று
கடமை பிறந்திருக்கும்

அரசியல்வாதிகளுக்காக கூடிய கூட்டம்
அன்புக்கு கூடியிருந்தால் - இன்று
அமைதி பிறந்திருக்கும்

தலைவர்களுக்காக கூடிய கூட்டம்
தன்மானத்திற்காக கூடியிருந்தால் - இன்று
தமிழ் ஈழம் பிறந்திருக்கும்

காதல் பறவை

 
எங்கையோ பிறந்து வளர்ந்த பறவை
வந்து அமர்கிறது என் மனம் என்னும் -மரத்தில்

அங்கு உண்டு உரையாடி விளையாடி
அசுத்தம் செய்து பறக்கிறது அடுத்த மரத்த்தை - தேடி

என் மனம் என்னும் மரம் காத்து கொண்டு இருக்கிறது
என்னிடத்தில் கூடு கட்டி வாழும் பறைவைக்காக!

Wednesday, September 18, 2013

அன்னையிடம்


கற்றலில் கண்டேன் - அறிவை 
அறிவை கண்டேன் - தேடலில் 
தேடலில் கண்டேன் - உழைப்பை 
உழைப்பில் கண்டேன் - உயர்வை 
உயர்வில் கண்டேன் - மகிழ்வை 
மகிழ்வில் கண்டேன் - தொண்டை 
தொண்டில் கண்டேன் - அன்பை  
அன்பில் கண்டேன் - நிறைவை 
நிறைவில் கண்டேன் - உண்மையை 
உண்மையில் கண்டேன் - அமைதியை 
இவை அனைத்தையும் கண்டேன் - அன்னையிடம் !

Thursday, September 12, 2013

ஆள்பவர்கள்


சுதந்திரத்திற்கு முன்
வெள்ளைக்காரர்கள் - ஆண்டார்கள்
சுதந்திரத்திற்கு பின்
கொள்ளைக்காரர்கள் - ஆளுகிறார்கள்

Wednesday, September 4, 2013

ஆமென்


படிப்பது பைபிள்
போதிப்பது தேவ வார்த்தைகள்
தவறாமல் செல்வது
ஞாயிற்று கிழமை ஆராதனை
பாடுவது கீதங்களும் கீர்த்தனைகளும்
கட்டுவது வானுயர்ந்த கோபுரங்கள்

முக்கியத்துவம் கொடுப்பது
பதவிக்கும் பணத்திற்கும்
இருப்பது கோஷ்டி  பூசல்
செய்வது ஓட்டு  அரசியல்
விற்பது திருமண்டல சொத்தை
பேசுவது அடுத்தவர்களை இகழ்ந்து

எல்லாம் இறைவன் செயல்
அவனின்றி அணுவும் அசையாது
துதி கனம் மகிமை
அனைத்தும் இறைவனுக்கே  - ஆமென்

Monday, September 2, 2013

முகநூல்(Facebook)

முகநூலி(Facebook)ல் நண்பர்கள் - ஆயிரம்
முகம்(Face) பார்த்து பேச யாரும் இல்லை!

தொலைத்தேன்

படித்தேன்
பணத்தை -தொலைத்தேன்

அயலூர் சென்றேன்
அன்பை -தொலைத்தேன்

வேலைக்கு சேர்ந்தேன்
வேண்டியவர்களை -தொலைத்தேன்

பணம் சம்பாதித்தேன்
பண்பை -தொலைத்தேன்

உண்மையை பேசினேன்
உயர்வை -தொலைத்தேன்

மேல் பதவி பெற்றேன்
மனிதத்தை -தொலைத்தேன்

அவளை கண்டேன்
அனைத்தையும் -தொலைத்தேன்

Monday, August 5, 2013

கெடுவதில்லை



கொடுப்பவன் கெடுவதில்லை - ஏமாற்றி 
வாங்குபவன்   வாழ்வதில்லை 

Saturday, August 3, 2013

விடியலைத்தேடி

ஊழல் மிகுந்த அரசியல்வாதிகள் 
பொறுபற்ற அரசு அதிகாரிகள் 
அடிமை படுத்தும் சாதித்தலைவர்கள் 
மடமை  படுத்தும்  மதத்தலைவர்கள் 
நீதியை விற்கும் நீதித்துறை 
கற்ப்பு இழந்த காவல்துறை 
இலாப நோக்கத்தில் கல்விநிறுவனங்கள் 
உணர்வை மதிக்காத தனியார்நிறுவனங்கள்
மனித நேயமற்ற சமுதாயம் 
சுயநலம்மிக்க  தனி மனிதர்கள் 
இந்த சீர்கேடு நிறைந்த 
அழுக்காற்றில் நீந்துகிறேன் விடியலைத்தேடி!

Wednesday, July 17, 2013

ஊதியம்


அம்மாவின் அன்பு 
அப்பாவின் அறிவுரை 
உடன் பிறந்தவர்களின் ஊக்கம் 
உறவினர்களின் உற்சாகம் 
நண்பர்களின் நம்பிக்கை 
துணைவியின் தூண்டுதல் 
குழந்தையின் குரல் - இதற்க்கு
எந்தவகையிலும் இணையில்லை
 மாதத்தின் முதல் நாள்
 ஊதியம் !!!!!!!!!!!!!