Friday, June 3, 2011

மூன்றுக்கு ஒரு சிறப்பு


மூன்றுக்கு ஒரு சிறப்பு உண்டு
இயல், இசை,நாடகம் என தமிழ் -மூன்று
தமிழ் வளர்த்த சங்கங்கள் -மூன்று
பகுத்தறிவு பாசறையில்
பெரியார் , அண்ணா, கலைஞர்
என்று வேந்தர்கள் - மூன்று
இவை அனைத்தும் ஒன்றாய்
கலைஞராய் பிறந்தது ஜூன் - மூன்று

எட்டு எட்டாக எடுத்து வைத்து
என்பத்தி எட்டை எட்டினாய் - நீ
உன் ஓயாத உழைப்பின் வேகம்
குறையவில்லை இன்றும்

தமிழுக்கும் அமுது என்று பெயர் - என்ற
பாவேந்தர் பாரதிதாசனின் வாக்கு
உன் மேடை பேச்சை கேட்ட்டுத்தான்
தமிழும் அமுது என்று அருந்தினோம்

சூரியன் மறைந்து விட்டது - என்று
சிலர் எள்ளி நகையாட - நாங்கள்
புரிந்து கொண்டோம் பூமிதான்
தன்னை மறைத்து கொண்டது
சற்று இளைப்பாற - சூரியன்
எப்பொழுதும் மறையாத ஒன்று

நெருக்கடி என்னும்
நெருப்பாற்றில் நீந்தியவன் -நீ
இப்பொழுது இருக்கிற இறுக்கமான சூழ்நிலை
என்ன செய்து விடும் - உன்னை

ரயிலடியில் உன்மீது பாய்ந்து வந்த
உளியை கண்டு அஞ்சாதவான் -நீ
வெட்டி வாய்பேச்சி வீரர்களின்
வார்த்தை உன்னை என்ன செய்து விடும்?
எதிரிக்கும் தெரியும் உன் ஆற்றல்.

பொதுவாழ்வில் உன்னைப்போல்
ரணங்களும்,அவமானங்களும்
பெற்றவர்கள் எவரும் இல்லை -ஆம்
ரப்பர் மரங்களுக்கு ரணங்கள் என்ன புதியதா?

எங்கள் உணர்வுகளுக்கு உரமூட்ட
உன் எழுத்து தேவை - தோல்வியால்
சோர்ந்திருக்கும் எங்களை கதகதபேற்ற
உன் பேச்சு தேவை சிங்கமென கிளம்பி -வா

நீ இருப்பது சிலருக்கு வெறுப்பு
அதுவே எங்களுக்கு சிறப்பு.