Tuesday, December 10, 2013

கருப்பு வைரத்துக்கு கண்ணீர் அஞ்சலி


இருண்ட கண்டத்தில் உதித்த -உதய சூரியனே
இரும்புத்திரையை உடைத்தெழுந்த கதிரே!

பழங்குடி இனத்தில் பிறந்த -பகலவனே
பலமான நிற வெறியர்களை  சுட்டெரித்த சுடரே!

அடிமையின் இருளை அகற்ற வந்த-அகல் விளக்கே
அகங்கார வெள்ள இனத்தை கருக்கிய நெருப்பே

அறப் போராட்டத்தில்   தொடங்கி
ஆயுதப் போராட்டத் தலைவனாக நின்றவன் நீ!

தன்  இன மக்கள் விடுதலைக்காக - சிறையில்
தன்னையே உருக்கிகொண்ட மெழுகுவர்த்தி நீ!

மன்னிப்பை கேட்டு விடுதலை பெறுவதை விட
மரணமே போதும் என்ற மன உறுதியாளன்  நீ!

உலக தலைவர்களுக்கெல்லாம்
உன்னத தலைவன் நீ !

உலக  போராளிகளுக்கெல்லாம்
உதாரணம் நீ !

பூர்விக குடியின் புதல்வன் நீ !
பூலோகமே போற்றும் கருப்பு வைரம் நீ !

அமைதியின் வடிவம் நீ !
அன்பின் தோற்றம் நீ !

உன்னைக் கட்டித்தழுவத் துடிக்கின்றோம்.
என்ன செய்வது எங்களை விட்டு பிரிந்து விட்டாய்  நீ!

மேகங்களிடம் எங்கள் கண்ணீரை காணிக்கையாக
அனுப்பியுள்ளோம் பெற்றுக்கொள்!!.

Monday, December 9, 2013

டெல்லி மக்களுக்கு ஒரு சலாம்!


ஓட்டுக்கு பணம் இல்லை
மது விருந்து  இல்லை

அரசியல் பின்புலம் இல்லை
சினிமா மாயா கவர்ச்சி இல்லை

இலவசங்கள் இல்லை
பிரித்தாலும் சூழ்ச்சி இல்லை

சாதியம் இல்லை
மத வெறி இல்லை

ஊழலுக்கு எதிரான உணர்வு இருந்தது
உண்மை மீதான தாகம் இருந்தது

ஏழைகளின்  ஆதரவு இருந்தது
இளைஞர்களின்  உழைப்பு  இருந்தது

மாணவர்களிடம் எழுர்ச்சி இருந்தது
மக்களிடம் உணர்ச்சி இருந்தது

கையில் துடைப்பம் இருந்தது
அரசியல் குப்பைகளை துடைக்க

ஓட்டு  இயந்திரத்தில் துடைப்பம் இருந்தது
உணர்வாளர்களின் என்னத்தை வெளிப்படுத்த

உணர்வுக்கு உயிர் கொடுத்து
இந்திய மக்களுக்கு அறிவின்
எடுத்து காட்டாய் திகழ்ந்த
டெல்லி மக்களுக்கு நன்றி

இதற்க்கு ஆதாரமாய் விளங்கிய
அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஒரு சலாம்!