Tuesday, July 21, 2009

இயற்கையின் நட்பு




நண்பர்களோடு இயற்கையைக் காண,
நட்பாகச் செல்ல விரும்புகிறோம்.



எந்த நண்பர்களோடு சென்றாலும்
இயற்கை நம்மை நட்பாக ஏற்றுக் கொள்கிறது.

மலையில் தவழ்ந்து வரும் மேகம் ,
அணைக்கும் அன்னையாகவும் .

மெய் சிலிர்க்க வைக்கும் அருவி
தந்தையின் அறிவுரையாகவும்





துள்ளிக் குதிக்கும் வன விலங்குகள் ,
செல்லக் குழந்தையாகவும்



நம்மை ஆனந்தப் படுத்தும்
ஒரு அரணாகவும் இருந்து
ஓர் குடும்ப பாசத்தைக் கொடுக்கிறது
இயற்கை அன்னையைப் போற்றுவோம்.


Friday, July 3, 2009

யார் நினைப்பது நடக்கிறது?

யார் நினைப்பது நடக்கிறது இவ்வுலகில்-
நாம் நினைத்தது நடந்து விட?

கடவுள் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - உலகில்
எங்கும் அமைதியும் சாந்தமும் இருக்கும்.

மனிதன் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்-அவன்
மகிழ்ச்சியாக இருக்கும் -போது
பூமி பொன்னாகவும்
கோபமாக இருக்கும் -போது
பூமி நெருப்பாகவும் மாறும்.

நல்ல தலைவர்கள் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - மக்கள்
லட்சியத்துடனும் ,கோட்பாட்டுடனும் இருப்பார்கள்.

அரசியல்வாதிகள் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - நாடெங்கும்
வீதியெங்கும் பணமழை பெய்யும்.

எதற்காக இத்தனை வீராப்புகள்?
எதற்காக இத்தனை போராட்டங்கள்?
எதற்காக இத்தனை சண்டைச் சச்சரவுகள்?
மனிதனின் இந்த குருகிய வாழ்க்கை பயணத்தில்.

யாரேனும் ஒருவர் நினைப்பது நடந்துவிட்டால்
இந்த பூமியில் ஒரு கட்டுப்பாடும் - மக்களின்
வாழ்க்கையில் ஒரு சுவராசியமும்
இல்லாமல் போய் விடுமோ?

உலகமே நம்பிருக்கும்
கடவுள் நினைப்பதே - நடக்காவிடில்
நாம் நினைப்பது எப்படி நடக்கப்போகிறது?