Friday, July 3, 2009

யார் நினைப்பது நடக்கிறது?

யார் நினைப்பது நடக்கிறது இவ்வுலகில்-
நாம் நினைத்தது நடந்து விட?

கடவுள் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - உலகில்
எங்கும் அமைதியும் சாந்தமும் இருக்கும்.

மனிதன் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால்-அவன்
மகிழ்ச்சியாக இருக்கும் -போது
பூமி பொன்னாகவும்
கோபமாக இருக்கும் -போது
பூமி நெருப்பாகவும் மாறும்.

நல்ல தலைவர்கள் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - மக்கள்
லட்சியத்துடனும் ,கோட்பாட்டுடனும் இருப்பார்கள்.

அரசியல்வாதிகள் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் - நாடெங்கும்
வீதியெங்கும் பணமழை பெய்யும்.

எதற்காக இத்தனை வீராப்புகள்?
எதற்காக இத்தனை போராட்டங்கள்?
எதற்காக இத்தனை சண்டைச் சச்சரவுகள்?
மனிதனின் இந்த குருகிய வாழ்க்கை பயணத்தில்.

யாரேனும் ஒருவர் நினைப்பது நடந்துவிட்டால்
இந்த பூமியில் ஒரு கட்டுப்பாடும் - மக்களின்
வாழ்க்கையில் ஒரு சுவராசியமும்
இல்லாமல் போய் விடுமோ?

உலகமே நம்பிருக்கும்
கடவுள் நினைப்பதே - நடக்காவிடில்
நாம் நினைப்பது எப்படி நடக்கப்போகிறது?

3 comments:

  1. Very Nice........but expecting a lot from u:-)

    ReplyDelete
  2. Thambi, it is true that all that we dream may not come true. If all accept this principle, they will be happy. We must be open enough to accept that comes to our life.
    Your words encourage me. Thanks.
    All the best.
    Bosco

    ReplyDelete
  3. Thambi, you are great. I like your reflexions. Very simple but very deep.
    Looking forward your bright future
    Bosco

    ReplyDelete