Monday, November 23, 2009

வழியைத் தாங்கியவர்களால் தான் வளமுடன் வாழ முடியும்.



ஒரு சிற்பி ஒரு மலையில் நடந்து செல்லும் பொழுது , ஒரு கல்லைப் பார்க்கின்றான் அது சிலை செய்வதற்கு ஏற்ற கல்லாக இருக்கிறது , உடனே அந்த கல்லிடம், சிற்பி கேட்கின்றான் நான் உன்னைச் சிலையாக செதுக்கட்டும என்று , அதற்கு அந்தக் கல் சொல்கிறது , நீ என்னைச் செதுக்கும் பொது உளி என் மேல் படும் அது எனக்கு வலிக்கும் வேண்டாம் போ என்றது , உடனே சிற்பி அருகில் இருந்த கல்லிடம் கேட்கின்றான் அது சிலை செதுக்குவதற்கு அவ்வுளவு உகந்த கல் இல்லை என்றாலும் கேட்கின்றான் , அது உடனே சமதித்தது , சிற்பி அந்தக் கல்லை அழகான சிலையாக வடிவமைக்கின்றான். அந்த வழியாக செல்பவர்கள் அதை வழிபடத் தொடங்குகிறார்கள், அப்பொழுது மக்கள் தேங்காய் உடைத்து வழிபட கல்லைத் தேடுகிறார்கள், அப்பொழுது முதலில் சிற்பியிடம் என்னைச் சிலையாக செதுக்காதே என்ற கல்லைப் பார்க்கிறார்கள் அதைத் தேங்காய் உடைக்க பயன் படுத்துகிறார்கள், ஒரு நாள் வலியை தாங்க மறுத்த கல் இப்பொழுது வாழ்க்கை முழுவதும் அடிபட்டுக் கொண்டு இருக்கிறது.




கடுமையாக உழைப்பவர்களால் கூட சில நேரங்களில் மகிழ்ச்சியாக வாழ இயலவில்லை ,
அவர்களும் சலித்துத் கொள்ளுகிறார்கள் என்ன கஷ்டப்பட்டு உழைத்து என்ன பயன் என்று.
நாம் சில இடங்களில் எடுக்கின்ற தவறான முடிவுகளால் வாழ்க்கை முழுவதும் அடி வாங்கி கொண்டு இருக்கின்றோம். அப்போதைக்குக் கிடைக்கின்ற சிறிய மகிழ்ச்சிக்காக , பின்னால் கிடைக்க போகின்ற பெரிய மகிழ்ச்சியான நிகழ்வுகளை இழக்கின்றோம்.

அடிப்பவர்களுக்கு வலி தெரியாது , அடி வாங்குபவர்களுக்குதான் வலியின் துயரம் தெரியும். வலி என்பது நம்மை ஒருவர் அடித்தால் ஏற்படுவது மட்டும் அல்ல. நாம் உழைக்கும் உழைப்பும் ஒரு வலிதான், வாழ்க்கையில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நாம் கடுமையாக உழைத்து இருந்தால் நாம் ஒரு வளமான இடத்திற்குச் சென்று விடலாம். வரும் பொழுது பார்த்து கொள்ளலாம் என்றால் நாம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியேதான் இருப்போம்.நாம் கடினப்பட்டு உழைக்கின்ற உழைப்பு நம்மைச் செதுக்கின்றது, நாம் நம்மை செதுக்கும் போது பக்குவம் அடைகின்றோம். அந்த பக்குவம்தான் எப்படி பட்ட மனிதருக்கும் வாழ்வின் அனுபவத்தைக் கற்றுக் கொடுக்கிறது.

நல்ல எண்ணத்துடன் கடுமையாக வலியைத் தாங்கி நல்ல செயல்களுக்காக முயற்சி செய்வோம். அடுத்தவர்களின் குறைகளையே பார்த்துக் கொண்டு , அவர்களை விட நாம் நன்றாக இருக்கின்றோம் என்று நாமே நம்மைப் பற்றிப் பெருமையாக பேசாமல் , அடுத்த படியான வெற்றிக்கு முயற்சிப்போம் , நமது வாழ்க்கையை வலிமையான வளமாக மாற்றுவோம்.

Friday, November 6, 2009

எது நமது பலவீனம் ?

" பிளவுப் பட்டு கிடப்பதே தமிழனின் பெரிய பலவீனம் ". நாம் தமிழர்கள் என்றாலும் பல்வேறு வகையான முறைகளில் வேறுபட்டு, சிதறிக் கிடக்கின்றோம்.

அறிவியல் பூர்வமாக அணுக்கள் பிளவு படும் பொழுது சக்தி வெளிப்பட்டு மின்சாரமாக அல்லது வேறு வினையாக வெளிப்படுகிறது. அவை பிளவுபட்ட பிறகு செயல் இழந்து மறு உபயோகம் இல்லாமல் போகின்றது அது போலதான் நமது சமுதாயத்திலும் நடக்கின்றது.

ஒரு குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் , நண்பர்கள் , கணவன் மனைவி மற்றும் உறவினர்களிடம் பிளவு ஏற்படும்பொழுது மிகவும் சண்டையும் பிரச்சனையாகவும் இருக்கும் பிரிந்த பிறவு நாம் வலுவிழந்து போகிறோம்.

நாம் தமிழர்கள் என்ற ஓர் இனமாக இருந்தாலும் நம்மால் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப் பட்டவர்களும் , அல்லது நாம் வழி காட்டியாக நினைத்து கொண்டு இருப்பவர்களும் நம்மை சரியான முறையில் பிரித்து வைத்திருக்கிறார்கள் நாமும் சிறு மனிதாபிமானம் இல்லாமல் அதைப் பின்பற்றி யாருக்கும் சரியான ஒத்துழைப்பு கொடுக்காமல் நம்மை நாமே பலவீனப் படுத்தி கொண்டு இருக்கின்றோம்.

நாம் எவ்வாறெல்லாம் பிரிக்கப் பட்டு இருக்கிறோம். முதலில் சாதிகளாக , சாதிக்கொரு தெரு , கோவில் என்றும் , அந்த சாதியில் பிரபலமான ஒருவர் அல்லது பணக்காரராக இருந்தால் அவர் எவ்வுளவு மோசமான அல்லது மனிதாபிமானத்திற்கு எதிரானவராக இருந்தாலும் அவரை தனது சாதியின் தலைவராக ஏற்றுக் கொண்டு நமக்கு ஒரு அங்கிகாரத்தை ஏற்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். அப்படியே நமக்கு ஒரு நல்ல தலைவர் கிடைத்தாலும் அவரைச் சாதி முத்திரை குத்தி புறம் நாம் தள்ளுகிறோம்.

மேலும் அரசியல் கட்சி அடிப்படையில், சினமா நடிகர்களின் ரசிகர் மன்றம் அடிப்படையில், ஏழை பணக்காரன் என்ற அடிப்படையில், தொழில் அடிப்படையில், மதம் அடிப்படையில், படித்தவன் படிக்காதவன் என்ற அடிப்படையில் , எவன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் மற்றும் எவன் வலிமையானவன் என்ற அடிப்படையில்( இதனால் நாம் ஒரு நாடு மற்றும் இனத்தையே இழந்து இருக்கின்றோம்) . நாம் பிளவுப் பட்டுக் கொண்டு இருக்கிறோம்.

இப்படி பல்வேறு விதங்களில் சிதைந்து கிடக்கும் என் இனமே எப்பொழுது சிந்திப்பாய்?-ஒரு மனிதனாக. எப்பொழுது ஒன்று சேருவாய்? நமது பலத்தை நிரூபிக்க. ஒருநாள் எல்லா விதமான வேலைகளையும் , சுய நலங்களையும் , வறட்டுக் கவுரவத்தையும், தேவை இல்லாத தற் புகழ்ச்சி, வீணான வெளிவேடங்களையும் விட்டுவிட்டு ஒரு மனித நேயத்துடன் சிந்திப்போம் , ஒன்று படுவோம் , பலத்தை நிருபிப்போம் நமது இலட்சியத்தை அடைவோம்.

Wednesday, November 4, 2009

ஷேர் ஆட்டோ

ஒரு டிக்கெட்டுக்காக
பல விக்கெட்டுகளை வீழ்த்துவது!