Monday, November 23, 2009

வழியைத் தாங்கியவர்களால் தான் வளமுடன் வாழ முடியும்.



ஒரு சிற்பி ஒரு மலையில் நடந்து செல்லும் பொழுது , ஒரு கல்லைப் பார்க்கின்றான் அது சிலை செய்வதற்கு ஏற்ற கல்லாக இருக்கிறது , உடனே அந்த கல்லிடம், சிற்பி கேட்கின்றான் நான் உன்னைச் சிலையாக செதுக்கட்டும என்று , அதற்கு அந்தக் கல் சொல்கிறது , நீ என்னைச் செதுக்கும் பொது உளி என் மேல் படும் அது எனக்கு வலிக்கும் வேண்டாம் போ என்றது , உடனே சிற்பி அருகில் இருந்த கல்லிடம் கேட்கின்றான் அது சிலை செதுக்குவதற்கு அவ்வுளவு உகந்த கல் இல்லை என்றாலும் கேட்கின்றான் , அது உடனே சமதித்தது , சிற்பி அந்தக் கல்லை அழகான சிலையாக வடிவமைக்கின்றான். அந்த வழியாக செல்பவர்கள் அதை வழிபடத் தொடங்குகிறார்கள், அப்பொழுது மக்கள் தேங்காய் உடைத்து வழிபட கல்லைத் தேடுகிறார்கள், அப்பொழுது முதலில் சிற்பியிடம் என்னைச் சிலையாக செதுக்காதே என்ற கல்லைப் பார்க்கிறார்கள் அதைத் தேங்காய் உடைக்க பயன் படுத்துகிறார்கள், ஒரு நாள் வலியை தாங்க மறுத்த கல் இப்பொழுது வாழ்க்கை முழுவதும் அடிபட்டுக் கொண்டு இருக்கிறது.




கடுமையாக உழைப்பவர்களால் கூட சில நேரங்களில் மகிழ்ச்சியாக வாழ இயலவில்லை ,
அவர்களும் சலித்துத் கொள்ளுகிறார்கள் என்ன கஷ்டப்பட்டு உழைத்து என்ன பயன் என்று.
நாம் சில இடங்களில் எடுக்கின்ற தவறான முடிவுகளால் வாழ்க்கை முழுவதும் அடி வாங்கி கொண்டு இருக்கின்றோம். அப்போதைக்குக் கிடைக்கின்ற சிறிய மகிழ்ச்சிக்காக , பின்னால் கிடைக்க போகின்ற பெரிய மகிழ்ச்சியான நிகழ்வுகளை இழக்கின்றோம்.

அடிப்பவர்களுக்கு வலி தெரியாது , அடி வாங்குபவர்களுக்குதான் வலியின் துயரம் தெரியும். வலி என்பது நம்மை ஒருவர் அடித்தால் ஏற்படுவது மட்டும் அல்ல. நாம் உழைக்கும் உழைப்பும் ஒரு வலிதான், வாழ்க்கையில் ஏதாவது ஒரு சூழ்நிலையில் நாம் கடுமையாக உழைத்து இருந்தால் நாம் ஒரு வளமான இடத்திற்குச் சென்று விடலாம். வரும் பொழுது பார்த்து கொள்ளலாம் என்றால் நாம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் அப்படியேதான் இருப்போம்.நாம் கடினப்பட்டு உழைக்கின்ற உழைப்பு நம்மைச் செதுக்கின்றது, நாம் நம்மை செதுக்கும் போது பக்குவம் அடைகின்றோம். அந்த பக்குவம்தான் எப்படி பட்ட மனிதருக்கும் வாழ்வின் அனுபவத்தைக் கற்றுக் கொடுக்கிறது.

நல்ல எண்ணத்துடன் கடுமையாக வலியைத் தாங்கி நல்ல செயல்களுக்காக முயற்சி செய்வோம். அடுத்தவர்களின் குறைகளையே பார்த்துக் கொண்டு , அவர்களை விட நாம் நன்றாக இருக்கின்றோம் என்று நாமே நம்மைப் பற்றிப் பெருமையாக பேசாமல் , அடுத்த படியான வெற்றிக்கு முயற்சிப்போம் , நமது வாழ்க்கையை வலிமையான வளமாக மாற்றுவோம்.

5 comments:

  1. நல்ல கருத்து.

    வலி வளமையைத் தருதோ இலலையோ. பக்குவப்படுத்தும்.

    நன்றி சகோதரர‌ே

    ReplyDelete
  2. I thought, you were doing some good job in chennai. But..ok.

    ReplyDelete
  3. " ஒரு நாள் வலியை தாங்க மறுத்த கல் இப்பொழுது வாழ்க்கை முழுவதும் அடிபட்டு கொண்டு இருக்கிறது."

    Nice na.........

    ReplyDelete
  4. தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

    இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

    அன்புடன்
    www.bogy.in

    ReplyDelete