Tuesday, December 14, 2010

சாதி தீ மறையட்டும்.

புயல் என்பது இயற்கையின் கிளர்ச்சி
புரட்சி என்பது உணர்வின் கிளர்ச்சி

புரட்ச்சி என்பது எரிமலைப் போன்றது. அது ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் உறங்கி கொண்டிருகிறது. அது எப்பொழுதும் வெடிப்பதில்லை. திடீரென ஒருநாள் வெடித்துச் சிதறுகிறது. பல்வேறு நாடுகளில் புரட்சியால் , எரிமலை போல வெடித்துச் சிதறிய நாட்கள் வரலாற்றின் பக்கங்களில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ளன.

புரட்சிக்கான காரணமும் , யாரிடமிருந்து யாருக்கு விடுதலை தேவை என்பதும் நாட்டிற்க்கு நாடு, இனத்திற்கு இனம் வேறு படுகிறது. தற்போது தமிழ் மக்களாகிய நாம் சாதி , மத , இன , மூடநம்பிக்கைகளையும் ஒழிக்க ஒரு புரட்சியில் ஈடு படவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இந்த புரட்சியில் ஈடுபடத்தவறினால் வந்தாரை வாழவைக்கும் தமிழினம் அழிந்து போகும் அபாயம் ஏற்ப்படும்.

கள்ளம் கபடமற்ற குழந்தையிடம் முதன்முதலில் சாதியை புகுத்துவது பள்ளிகூடமாகவே உள்ளது. நீ எந்த சாதியை சார்ந்தவன்? என்று கேட்டு அந்த குழந்தையின் மனதில் சாதித்தீயை பற்ற வைக்கிறார்கள். அறியாமை இருளை அகற்றவேண்டிய கல்விக் கூடங்களே சாதியை நன்கு அறிமுகப்படுத்துகிறது.

பாம்பு புற்றை விட
சாதி சங்கங்களைப் பார்க்கும் போது தான்
பயம் அதிகரிக்கின்றது

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழர்கள் சங்கம் வைத்து தமிழை வளர்த்துள்ளார்கள். அனால் இருபதாம் நூற்றாண்டு தமிழர்களோ சங்கம் வைத்து சாதியை வளர்க்கிறார்கள். இன்றைய அரசியலோ சாதியை நம்பிதான் உள்ளது. தேர்தலின் வெற்றித் தோல்விகளும் சாதியை அடிப்படையாகக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன. சாதிகளை ஒழிக்கப் பாடுபடவேண்டிய அரசியல் வாதிகள் மக்களிடயே சாதி உணர்வை ஊக்குவித்து தங்களுடைய பதவி ஆசைகளை நிறைவேற்றி கொள்கின்றனர்.

கூண்டுக் கிளியின் விடுதலைக்காக
பூனை கிளர்ச்சி செய்ததது - அது
கிளியின் விடுதலைக்கு அல்ல
தன் பசியை நீக்க (கலைஞர்)

இது போல தான் இன்றைய சாதித் தலைவர்கள் . சாதிப் பெயர் கொண்ட சங்கங்கள் அமைப்பதும் , சாதி மக்களுக்காக நன்மை செய்வது போல் நடிப்பதும், அதனை அரசியல் கட்சியாக மாற்றிக் கொள்வதும் , அதனை பயன்படுத்தி பதவிகளை கைப்பற்ற முயற்சிப்பதும் தலைக்குனிய வைக்கும் செயல்களாகும்.

சாதிகள் அன்று முதல் இன்று வரை சமுதாயத்தை அலைக்கழித்து வருகின்றது. சமுதாயத்தின் மீது அக்கறை கொண்ட பலர் சாதியை எதிர்த்து குரல் எழுப்பி கொண்டே இருக்கிறார்கள் எனினும் சாதி ஒழிந்த பாடில்லை.

சாதிகள் சட்டமயமாக்கப்படிருக்கும் இந்த நாட்டில் ஒரு மனிதன் தன்னை எவ்வாறு அறிமுகப் படுத்தி கொள்வான்?
தான் இந்த சாதியை சார்ந்தவன் என்றா?
தான் இந்த இனத்தை சார்ந்தவன் என்றா?
தான் இந்த மதத்தை சார்ந்தவன் என்றா?

இளைய சமுதாயமே! தமிழ்த்தாயின் வீரப்புதல்வர்களின் விலைமதிப்பற்ற இரத்தம் தேய்ந்து புனிதமடைந்திருக்கும் தமிழ் மண்ணில் இருந்து கொண்டு ஏளனத்திற்குரிய கீழ்த்தரமான வாழ்கை வாழ வெட்கமாக இல்லையா? இன்றைய தலை முறையை எண்ணி புரட்சி பாதையில் நடைபோட உங்கள் மனம் விரும்பவில்லையா? இதையெல்லாம் மறந்தவிட்டு இன்றைய இளைய சமுதாயம் தான் தலைவியாக நினைக்கும் சினிமா நடிகர்களின் பிறந்த நாளுக்கு சுவரொட்டி ஓட்ட விரைந்து கொண்டிருக்கிறது.

இளைய சமுதாயத்தின் சாதிப் பெயரால் தாழிடப்பட்டுள்ள தமிழர்களின் இதயக்கதவுகள் உடைந்து நொறுங்கட்டும். தமிழர்களின் பாமரத்தன்மையும் , அப்பாவித் தனமும் அழியட்டும் , நம் பெயருக்கு பின்னால் உள்ள சாதித்தீ மறையட்டும் , மனித நேயம் வளரட்டும். தமிழினம் செழிக்கட்டும்.

இளைஞனே!
நீ முடங்கி கிடந்தால்
சிலந்தியும் சிறைபிடிக்கும்

நீ பொங்கி எழுந்தால்
எரிமலையும் துணைநிற்கும்

உன்னால் பூமியை
புரட்டவும் முடியும்

உன் எலும்புகள்
தீண்டாமையை உடைக்கட்டும்

உன் பார்வை வீச்சு
மூட நம்பிக்கையை எரிக்கட்டும்

உன் பேச்சால்
தமிழன் சிந்திக்கட்டும்

சீரழிந்த சமுக்கதத்தை சீர்படுத்த
சாவின் விழிம்புவரை தொடரட்டும்
உன் போராட்டம்(கவிதாசன்)

Monday, December 13, 2010

ஒற்றுமை


எங்கள் வலிமை புரியாமல்
நீண்ட நாள் பிரிந்து இருந்தோம்
காலத்தின் கடமை தெரியாமல்
காலம் கடத்தி வந்தோம்

மற்றவர்களின் துன்பத்தை
இன்பமாய் ரசித்து வந்தோம்

நல்லவேளை நமக்குப் பிரச்சினை இல்லை
என்று நீண்ட நாள் ஒதுங்கி இருந்தோம்

நமக்கு ஏன் தேவை இல்லாத வேலை
உண்டு உறங்கி வந்தோம் மிருகங்கள் போல

நாட்டைக் கரையான் அரிக்கிறதா
ஊரை அட்டைப் பூச்சி உறிஞ்சிகிறதா
நமக்கென்ன உணவு கிடைக்கிறதா என்றிருந்தோம்

சேவல் கூவினாலும் கூவாவிட்டாலும்
பொழுது விடிந்துவிடும் என்று
இன்னும் தூங்கிக்கொண்டு இருக்கின்றோம்

ஒர் உயிர் துடித்தது இந்த
இந்த மானிடத்தின் நிலை நினைத்து
ஊழலின் அகாங்காரத்தைப் பார்த்து

தன உயிரை மாய்த்து மக்களுக்கு
உணர்த்தியது உணர்வோடு இருங்கள்
ஒற்றுமையாய் இருங்கள் என்று.

தமிழின் இனிமை !

தமிழ் அமிழ்தினும் அமிழ்து!
தமிழ் ஓசை கேட்பது
மழலையினும் இனிமை!

தமிழ் பேசுவது
தாய்மையுடனும் இனிது!!

தமிழ்த் தாய் இலக்கணத்துடன்
இலட்சியமாய் வாழ்கின்றவள்
இதனால்தான்

எங்கள் தாய் மொழியாகி,
தனிமொழியாகி, தலைமொழியாகி,
பின் செம்மொழியானாய்

தமிழ் தேனினும் இனிமை
தமிழை வியாபார
மொழியாகப் பார்க்காவிடில்

Thursday, December 9, 2010

மொட்டிலே கருகிப்போன மலர்களுக்கு!

குறிப்பு :- கும்பகோணம் குழைந்தைகள் தீயில் பலியான நினைவு நாளில் எழுதியது




நெருப்பே !
உனக்குள் உயிர் இல்லாததால் - இந்த
பிஞ்சுகளின் உயிரை கரியக்கிவிட்டயா
உனக்குத்தான் அறிவில்லையே
நீ என்ன செய்வாய் - அதற்கு
நாங்கள் என்ன செய்வது?

உனக்கு உலகத்தில் -இந்த
குழந்தகைள் தான் கிடைத்தா?

பிஞ்சுகளின் உழைப்பில் வாழும்
பித்தலாட்டகாரர்களை விட்டுவிட்டு
ஏன் இந்த சிறு குஞ்சுகளை எரித்தாய்?

மொட்டுகளே!
மகாமகத்தில் நாங்கள் கரைத்த
எங்கள் பாவங்கள் எல்லாம்
உங்கள் மீது படிந்து விட்டதோ அய்யகோ!

மரணமே!
நாட்டில் அடுத்தவர்கள் உழைப்பை
சுரண்டிவாழும் கயவஞ்சவர்களை
விட்டுவிட்டு உஎன் இந்த
துள்ளி விளையாடும்
துளிர்களை சுட்டெரித்தாய்

கடவுளே!
இந்த அரும்புகள் கதறியது -உன்
காதில் விழவில்லையா?
மலர்களின் மரண ஓலம் -உன்
மனதை கரைக்கவில்லையா?
உனக்கு அழிக்கவும் தெரியும்
என்று அழித்துவிட்டாய - இல்லை
நீ பிறந்தது என்ன இலங்கையா?

Tuesday, December 7, 2010

தலைவர் வாழ்த்து! தமிழ் வாழ்த்து!!




நெல் ஆடிய காவிரிகரையில்
வில் ஆடிய களத்தில்
சொல் ஆடிய சோழ மண்டலத்தில்
வீர குழந்தை பிறந்தது - அது
தாய் மொழிக்கே பெயர் சூட்டும்
தாயக பிறந்தது -தேனினும் இனிய
தமிழாக பிறந்தது - தாழ்த்த பட்டவர்களுக்கு
தந்தையாக பிறந்தது - தமிழினத்தின்
தலைமகனாக பிறந்தது - சூத்திரனுக்கு
சூத்திரமாக பிறந்தது - தமிழுக்கு
தொண்டனாக பிறந்தது - உழைப்புக்கு
ஊற்றாக பிறந்தது- திராவிடத்தின்
திரவியமாக பிறந்தது - பகுத்தறிவின்
பாலமாக பிறந்தது - பெரியாரின்
பொறியாக பிறந்தது - அண்ணாவின்
அன்பாக பிறந்தது - வள்ளுவனின்
வடிவமாக பிறந்தது - பாரதிதாசனின்
பாடலாக பிறந்தது - கண்ணதாசனின்
கவிதையாக பிறந்தது - கழகத்தின்
சூரியனாக பிறந்தது - உடன்பிறப்புகளுக்கு
உயிராக பிறந்தது!

பலகலைகழகம் சென்று படித்தவன் இல்லை -நீ
பலகலைகழகங்கள் உன்னை இன்று படிக்கின்றன


காமராஜர் ஏற்றிய கல்வி ஒளியை
கடுகளவும் குறையாவிடாமல்
காத்த பணியாளன் -நீ


தண்ணீருக்கே தாகமா என்று
வியக்கும் அளவுக்கு செந்தமிழை
ரசிக்கும் தமிழ்த்தேனி -நீ

வரலாறு தெரியாத காகங்கள்
கரையும் பொழுது கனிவுடன்
வரலாறு கூறி திருத்தும் பண்பாளன் -நீ

இக்கட்டான சூழ்நிலையிலும்
நகைச்சுவை புரியும்
சமையோதின நாயகன் -நீ

தமிழ் படங்கள் ஆரியத்தில்
தத்தளிக்கும்போது பராசக்தியாக
நெருப்பூட்டிய புதுமைபித்தன் - நீ


கழகத்தில் சிறு கழகங்கள்
ஏற்ப்படும் பொழுத்து கனிவுடன்
கையாளும் குயவன் - நீ


தமிழனத்திற்க்கு ஒன்றென்றால்
தன்னையே கொடுக்க வரும்
முதல்வன் -நீ


குறளை கடைந்தெடுத்த
கயவன் -நீ


கவிதை ஊற்றென பொழியும்
கற்பனையாளன் -நீ


கர கர குரலினால் இளையோரை
ஈர்த்த கள்வன் -நீ


முத்தமிழின் இனிமையை
உணர்த்திய இனியவன் -நீ


தீந்தமிழ் மீது
தீராத பற்றுகொண்ட காதலன் -நீ


மூத்தகுடி தமிழ் குடியின்
முதியவன் -நீ

சிந்தனையாளர்களின் தலைவன்- நீ

உழைப்பினால் ஓய்வுக்கு ஓய்வு
கொடுக்கும் இளைஞன் -நீ


அறுபது ஆண்டுகளுக்கும்
மேலாக தமிழகத்தின்
தலைப்புசெய்தி -நீ

ஆளும்கட்சியாக இருந்தாலும்
எதிர்கட்சியாக இருந்தாலும்
வில்லாக அம்பாக வரும்
விமர்சனங்களை தாங்கிய பீமன் -நீ

தமிழகத்தில் இரண்டே நிலைதான்
உன்னை கண்மூடித்தனமாக - எதிர்ப்பவர்கள்
உன்னை கண்மூடித்தனமாக - ஆதரிப்பவர்கள்

பல பத்திரிக்கைகள் உன்னால்தான்
பிழைப்பு நடத்துகின்றன


உன் துண்டு நிறம் மாறினும்
உன் தொண்டின் நிறம் மாறவில்லை


உன் கால்கள் தளர்ந்தாலும்
உன் தடம் மாறவில்லை


உன் பெருமை பற்றி பாட
உன்னருகில் கவிஞர்கள் இருக்கலாம்
உன் அருமை சொல்ல
உன்னருகில் அறிஞர்கள் இருக்கலாம்

ஆனால்
என்னை போன்ற உடன் பிறப்புகள்
உனக்கு காட்டிய நன்றி என்ன?

கழகத்தை ஐந்து முறை
ஆட்சியில் அமர்த்தியதும்
தோல்வியை உன்னை நெருங்க
விடாமல் துரத்தியதும்

என் தாத்தா காலத்திலும் முதலமைச்சர் -நீ
என் காலத்திலும் முதலமைச்சர் -நீ
என் பேரன் காலத்திலும்
முதல்வராய் வாழி நீ பல்லாண்டு !