Monday, March 23, 2009

யார் குற்றவாளி?

பொதுவாக நமக்கு ஓர் எண்ணம் சிறையில் இருப்பவர்கள் அல்லது சிறை சென்றுவந்தவர்கள் எல்லோரும் தவறானவர்கள் , குற்றவாளிகள் என்று நாம் நினைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்தால் சற்று விலகி நிற்கின்றோம். நமக்கு அந்த எண்ணம் வரக்காரணம் குற்றவாளிகளையும் , நீதிக்காக அல்லது உரிமைக்காகப் போராடுபவர்களையும் ஒரே சிறையில் வைத்து இருப்பதால்.

நாம் நம்மை நினைத்துப் பெருமைப் பட்டுக் கொள்கிறோம் நான் காவல் நிலையம் சென்றதில்லை, சிறைச்சாலை சென்றதில்லை என்று, அது நம்முடைய தவறான எண்ணம் உண்மையிலே நாம் தான் இந்த சமுதாயத்தில் பெரிய குற்றவாளிகள்.

நாம் கொஞ்சம் உணர்வு உள்ளவர்களாக அல்லது சமுதாயத்தில் தவறுகளைத் தட்டிக் கேட்க்கும் திராணி உள்ளவர்களாக இருந்து இருந்து இருந்தால் நாம் ஒருமுறையாவது நீதிமன்றம் , காவல் நிலையம் அல்லது சிறைச்சாலை சென்று வந்து இருப்போம்.

இப்படி இருக்கும் பட்சத்தில் நாம் அனைவரும் சமரசத்துக்கு உட்பட்டவர்கள். நாம் இந்த பிரச்சனை நம்மை விட்டு விலகிப் போனால் போதும் வேறு யாரவது பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்து நம் கண் முன்னால் நடக்கும் தவறுகளையும் , சமுக விரோதச் செயல்களையும் கண்டும் காணமல் விட்டு விடுகிறோம். நமக்கு ஏன் வீண் வம்பு என்று ஒதுங்கிச் செல்கிறோம். அல்லது அந்த பிரச்சனைக்குரியவர்களுடன் சமரசத்துக்குச் செல்கின்றோம். இதற்கு என்ன காரணம் , பொதுவாக சமுதாய பிரச்சனைகளுக்கு நாம் செல்லும் பொது குடும்பத்தினரின் ஆதரவு கிடைப்பதில்லை, சமுதாயம் நமக்கு ஒத்துழைப்பதில்லை எனவே நாம் பொதுவான பிரச்சனைகளில் இருந்து விலகி நின்று நமக்கு வரும் பொழுது பார்த்துக் கொள்ளலாம் என்று நினைத்து நமது மனதைத் தேற்றி கொள்கின்றோம்.

ஆனால் நம்முடைய உறவினர்களுடைய அல்லது உடன்பிறந்தவர்களின் சொத்துகளை அவர்களை உரிமைகளை அபகரிப்பதற்கு நாம் எங்கு செல்ல வேண்டுமானாலும் தயாராக இருக்கின்றோம். இதில் இருக்கும் முனைப்பை எதாவது ஒரு நல்ல செயலில் காட்டியிருத்தால் நாம் இந்த சமுதாயத்தில் ஒரு நல்ல இடத்தில் இருந்திருப்போம்.

ஆனால் நாம் ஒன்றை மறந்து விடுகிறோம் , சமுதாயத்தில் நம்முடைய வழிகாட்டிகளாகவும், நாம் மிகவும் போற்றும் தலைவர்கள் , நம்மை ஆளுகின்ற தலைவர்கள் அனைவரும் மக்களுக்காகவும் , உரிமைகளுக்காகவும் பல முறை சிறை சென்று வந்தவர்கள்தான். இன்று உலகம் பின் பற்றும் போராளிகள் அனைவருக்கும் முதலில் அவர்களின் முயற்சிக்கும், அவர்களின் உறுதியான செயல்பாடுகளுக்கும் போதிய ஆதரவு இல்லாமல் இருந்து இருக்கும் அவர்கள் சளைக்காமல் திரும்பத் திரும்ப போராடித்தான் இந்த நிலைமைக்கு வந்து இருக்கிறார்கள்.

எனவே நாம் சமுதாயத்தில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும் நம் கண் முன்னால் நடக்கும் தவறுகளுக்கு ஆதரவு தராமலும் , நாமும் தவறுகள் செய்யாமலும் தவறுகளைத் தட்டிக் கேட்கும் போராட்ட குணம் உள்ளவர்களாக இருப்போம். எப்பொழுதும் தவறான சமரசத்துக்கு உட்படாமல் இருப்போம். நேர்மயையான , வலிமையான சமுதாயத்தைப் படைப்போம்