Wednesday, November 14, 2012

கடவுளுக்கு சிக்கல்



ஒரு தாய் கடவுளிடம் வேண்டினாள் 
என் பிள்ளைகள்  நோய் நொடி இல்லாமல் 
நூறாண்டு வாழ வேண்டுமென்று !

மற்றொரு தாய் கடவுளிடம்  வேண்டினாள் 
எனது மகன் தொடங்கியுள்ள மருத்துவமனையில் 
அநேக  வருமானம் வரவேண்டும்  என்று !!

யாருடைய  வேண்டுகோளை ஏற்க்க 
என்று வழி தெரியாமல் 
கடவுள் தவித்து நின்றார் !!!

Friday, November 9, 2012

மனிதத்தின் புனிதம்




கிழிக்கும் கடைக்காரர்களுக்கு  தெரிவதில்லை 
புத்தகம் எழுதியவரின் உனர்வு 

வெட்டும் கத்திகளுக்கு தெரிவதில்லை 
உயிரின் மதிப்பு 

விமர்சிக்கும் வாய்களுக்கு தெரிவதில்லை 
விமர்சிக்க பாடுபவரின் ஆற்றல் 

அரசியல்வாதிகளுக்கு தெரிவதில்லை 
தொண்டின்  இனிமை 

உயர்நிலையினருக்கு  தெரிவதில்லை 
பாமர மக்களின் கண்ணீர் 

மொத்தததில் நமக்கு தெரிவதில்லை 
மனிதத்தின்  புனிதம் 

Monday, January 23, 2012

கருவறை



கருவறையை வயிற்றில்
சுமக்கும் பெண்ணுக்கு - கோவில்
கருவறைக்கு செல்ல
அனுமதி இல்லை!