Wednesday, November 14, 2012

கடவுளுக்கு சிக்கல்



ஒரு தாய் கடவுளிடம் வேண்டினாள் 
என் பிள்ளைகள்  நோய் நொடி இல்லாமல் 
நூறாண்டு வாழ வேண்டுமென்று !

மற்றொரு தாய் கடவுளிடம்  வேண்டினாள் 
எனது மகன் தொடங்கியுள்ள மருத்துவமனையில் 
அநேக  வருமானம் வரவேண்டும்  என்று !!

யாருடைய  வேண்டுகோளை ஏற்க்க 
என்று வழி தெரியாமல் 
கடவுள் தவித்து நின்றார் !!!

No comments:

Post a Comment