Friday, September 27, 2013

என் கணிதம்


கருணை  பொறுமை என்ற
நன்மைகளை - கூட்டினேன் (+)

பொறாமை  வஞ்சகம் என்ற
தீய பழக்கத்தை - கழித்தேன் (-)

கல்வி தொண்டு என்ற
இலட்சியங்களை    - பெருக்கினேன் (*)

பகிர்வு  நேர்மை என்ற
நல்லொழுக்கத்தை  - வகுத்தேன்(/)

வெற்றி  தோல்வி  என்ற
நிகழ்வுகளை ஏற்றுகொண்டேன்  - சமமாக(=)

வாழ்க்கை  கணக்கினை பிழையில்லாமல்  தீர்த்திட
அன்பு   என்னும் சூத்திரம் செய்து
கணக்கில்லா வளர்ச்சியை பெற்றிட்டேன்!

Thursday, September 19, 2013

கூட்டம்



மத தலைவர்களுக்காக கூடிய கூட்டம்
மக்களுக்காக கூடியிருந்தால் - இன்று
மனித நேயம் பிறந்திருக்கும்

கோவில்களுக்காக கூடிய கூட்டம்
கல்விக்காக கூடியிருந்தால் - இன்று
கருத்து பிறந்திருக்கும்

கடவுளுக்காக கூடிய கூட்டம்
காயபட்டவர்களுக்காக கூடியிருந்தால் - இன்று
கருணை பிறந்திருக்கும்

சாமியார்களுக்காக கூடிய கூட்டம்
சாமானிய மக்களுக்காக கூடியிருந்தால் - இன்று
சமதர்மம் பிறந்திருக்கும்

சாதி தலைவர்களுக்காக கூடிய கூட்டம்
சமூகத்திற்காக கூடியிருந்தால் - இன்று
சமத்துவம் பிறந்திருக்கும்

நடிகர்களுக்காக கூடிய கூட்டம்
நாட்டுக்காக கூடியிருந்தால் - இன்று
நன்மை பிறந்திருக்கும்

பணத்திற்காக கூடிய கூட்டம்
படிப்பதற்கு கூடியிருந்தால் - இன்று
பண்பு பிறந்திருக்கும்

சிலைகளுக்காக கூடிய கூட்டம்
சீரமைப்புகளுக்கு கூடியிருந்தால் - இன்று
சுத்தம் பிறந்திருக்கும்

கேளிக்கைகளுக்காக கூடிய கூட்டம்
கேள்வி கேட்ட்க கூடியிருந்தால் - இன்று
கடமை பிறந்திருக்கும்

அரசியல்வாதிகளுக்காக கூடிய கூட்டம்
அன்புக்கு கூடியிருந்தால் - இன்று
அமைதி பிறந்திருக்கும்

தலைவர்களுக்காக கூடிய கூட்டம்
தன்மானத்திற்காக கூடியிருந்தால் - இன்று
தமிழ் ஈழம் பிறந்திருக்கும்

காதல் பறவை

 
எங்கையோ பிறந்து வளர்ந்த பறவை
வந்து அமர்கிறது என் மனம் என்னும் -மரத்தில்

அங்கு உண்டு உரையாடி விளையாடி
அசுத்தம் செய்து பறக்கிறது அடுத்த மரத்த்தை - தேடி

என் மனம் என்னும் மரம் காத்து கொண்டு இருக்கிறது
என்னிடத்தில் கூடு கட்டி வாழும் பறைவைக்காக!

Wednesday, September 18, 2013

அன்னையிடம்


கற்றலில் கண்டேன் - அறிவை 
அறிவை கண்டேன் - தேடலில் 
தேடலில் கண்டேன் - உழைப்பை 
உழைப்பில் கண்டேன் - உயர்வை 
உயர்வில் கண்டேன் - மகிழ்வை 
மகிழ்வில் கண்டேன் - தொண்டை 
தொண்டில் கண்டேன் - அன்பை  
அன்பில் கண்டேன் - நிறைவை 
நிறைவில் கண்டேன் - உண்மையை 
உண்மையில் கண்டேன் - அமைதியை 
இவை அனைத்தையும் கண்டேன் - அன்னையிடம் !

Thursday, September 12, 2013

ஆள்பவர்கள்


சுதந்திரத்திற்கு முன்
வெள்ளைக்காரர்கள் - ஆண்டார்கள்
சுதந்திரத்திற்கு பின்
கொள்ளைக்காரர்கள் - ஆளுகிறார்கள்

Wednesday, September 4, 2013

ஆமென்


படிப்பது பைபிள்
போதிப்பது தேவ வார்த்தைகள்
தவறாமல் செல்வது
ஞாயிற்று கிழமை ஆராதனை
பாடுவது கீதங்களும் கீர்த்தனைகளும்
கட்டுவது வானுயர்ந்த கோபுரங்கள்

முக்கியத்துவம் கொடுப்பது
பதவிக்கும் பணத்திற்கும்
இருப்பது கோஷ்டி  பூசல்
செய்வது ஓட்டு  அரசியல்
விற்பது திருமண்டல சொத்தை
பேசுவது அடுத்தவர்களை இகழ்ந்து

எல்லாம் இறைவன் செயல்
அவனின்றி அணுவும் அசையாது
துதி கனம் மகிமை
அனைத்தும் இறைவனுக்கே  - ஆமென்

Monday, September 2, 2013

முகநூல்(Facebook)

முகநூலி(Facebook)ல் நண்பர்கள் - ஆயிரம்
முகம்(Face) பார்த்து பேச யாரும் இல்லை!

தொலைத்தேன்

படித்தேன்
பணத்தை -தொலைத்தேன்

அயலூர் சென்றேன்
அன்பை -தொலைத்தேன்

வேலைக்கு சேர்ந்தேன்
வேண்டியவர்களை -தொலைத்தேன்

பணம் சம்பாதித்தேன்
பண்பை -தொலைத்தேன்

உண்மையை பேசினேன்
உயர்வை -தொலைத்தேன்

மேல் பதவி பெற்றேன்
மனிதத்தை -தொலைத்தேன்

அவளை கண்டேன்
அனைத்தையும் -தொலைத்தேன்