Wednesday, September 4, 2013

ஆமென்


படிப்பது பைபிள்
போதிப்பது தேவ வார்த்தைகள்
தவறாமல் செல்வது
ஞாயிற்று கிழமை ஆராதனை
பாடுவது கீதங்களும் கீர்த்தனைகளும்
கட்டுவது வானுயர்ந்த கோபுரங்கள்

முக்கியத்துவம் கொடுப்பது
பதவிக்கும் பணத்திற்கும்
இருப்பது கோஷ்டி  பூசல்
செய்வது ஓட்டு  அரசியல்
விற்பது திருமண்டல சொத்தை
பேசுவது அடுத்தவர்களை இகழ்ந்து

எல்லாம் இறைவன் செயல்
அவனின்றி அணுவும் அசையாது
துதி கனம் மகிமை
அனைத்தும் இறைவனுக்கே  - ஆமென்

No comments:

Post a Comment