Wednesday, July 28, 2010

காதல் மீது காதல்




ஏன்?
காதல் மீது காதல்

ஏனென்றால்.....
காதல் என்பது
உயிருக்கு உணர்வு
உணர்வுக்கு உயிர்!

காதல்



காதல் வாழ வைக்கிறது
கடற்கரையில் சுண்டல்காரனை

காதல் வாழ வைக்கிறது
கடையில் ஐஸ்கிரீம்காரனை

காதல் வாழ வைக்கிறது
நாட்டில் தொலைத் தொடர்புதுறையினரை

காதல் வாழ வைக்கிறது
உலகத்தில் சினிமாக்காரர்களை

காதல் அழ வைக்கிறது
வீட்டில் பெற்றோரை

காதல் கடைசியில் அழிக்கிறது
சமுதாயத்தில் கலாச்சாரத்தை.

ஏமாற்றங்கள்



நம்முடைய வாழ்வில் நாம் அனைவரும் எல்லாச் சூழ்நிலையிலும், எல்லாப் பருவத்திலும் ஏமாற்றங்களை சந்தித்தும் , அந்த நிலையை கடந்தும் வந்திருப்போம். ஏமாற்றத்திற்கு என்று ஒரு வரைமுறையோ அல்லது ஒரு காரணமோ கிடையாது. அது எதாவது ஒரு சூழ்நிலையில் நம்முடைய வாழ்வில் ஒன்றாக கலந்து விடுகிறது. ஆனால் ஒவ்வொரு ஏமாற்றமும் நமக்கு எதாவது ஒரு படிப்பினையைக் கற்றுத் தருகிறது, அது என்ன என்று ஆராய்ந்து பார்த்து அறிந்து கொண்டால் வாழ்வில் சுலபமாக வெற்றி பெறலாம்.

பொதுவாக ஏமாற்றங்கள் மூன்று வகைகளில் நமக்கு ஏற்படுகிறது ஒன்று காலத்தால் மற்றொன்று அடுத்தவர்களால், மற்றொன்று நம் ஆசைகளை மிஞ்சும் போது. நாம் ஒவ்வொரு முறையும் ஏமாற்றங்களைச் சந்திக்கும் போது வாழ்வின் மீது வெறுப்பும் , மனத்துயரமும் மற்றும் தன்நம்பிக்கையும் இழந்து காணப்படுகின்றோம். நாம் சந்திக்கும் ஒவ்வொரு ஏமாற்றமும் நம்முடைய அடுத்த முயற்சிக்குத் தடைக்கல்லாகவே நினைக்கின்றோம். ஆனால், நாம் ஏமாற்றங்களை ஏற்றுக் கொண்டால்தான் நம்முடைய வாழ்வில் ஏற்றம் நிச்சயம் கிடைக்கும்.

காலத்தால் ஏற்படுகிற ஏமாற்றம் நாம் இயற்கையைச் சரியாக பேணிப் பாதுகாக்காததால் ஏற்படுகிறது. இதனால் முழு உலகமுமே பாதிக்கப் படுகிறது. அடுத்தவர்களால் ஏற்படுகிற ஏமாற்றம் நம்முடைய எதிர்பார்ப்புகளால் ஏற்படுகிறது. நாம் அடுத்தவர்களை எதிர்பார்ப்பதால் நாம் தன்நம்பிக்கை இல்லாதவர்கள் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் நம்முடைய வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரத்தால் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றோம். எதிர்பார்ப்பு எப்பொழுது அளவுக்கு அதிகமாக ஆகிறதோ அப்பொழுது மனபாதிப்புக்கு உள்ளாகிறோம். நம் ஆசைகளை மிஞ்சும் போது ஏற்ப்படுகிற ஏமாற்றம் நம்முடைய அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையும் நம்முடைய அறியாமையும் வெளிப்படுத்துகிறது. இதனால் நாம் நம்முடைய தன்னம்பிக்கையை இழக்கின்றோம்.

ஒவ்வொரு சூழ்நிலையிலும் நாம் சந்திக்கும் ஏமாற்றமும் நமக்கு ஏதோவொரு மாற்றத்திற்கான தொடக்கமும் ஊக்கமுமாகவே இருக்கிறது. வாழ்வில் ஏமாற்றங்களைச் சந்திக்கும் போது இந்த பாதை நமக்கு சரி இல்லை என்பதை நமக்கு உணர்த்துகிறது. எந்த ஒரு வகையான ஏமாற்றமும் நம்மைத் தாக்கும் போது நாம் சோர்வு அடையாமல், துவளாமல் , வீணாக புலம்பாமல் நம் மனதை திடப் படுத்தி நம்முடைய ஆளுமையை வளர்த்துக் கொண்டால் நாமே இவ்வுலகில் மிகச்சிறந்த வெற்றியாளர்.

இனிமை




சுகவீனமான நேரத்தில் தாயின் பரிவு
பலவீனமான நேரத்தில் தந்தையின் ஆறுதல்

தோல்வி நேரத்தில் உடன்பிறப்புகளின் ஊக்கம்
இக்கட்டான நேரத்தில் உறவினர்களின் துணை

துன்பமான நேரத்தில் நண்பனின் உற்சாகம்
தளர்வான நேரத்தில் பெரியவர்களின் வார்த்தை

சோர்வான நேரத்தில் மனைவியின் அரவணைப்பு
களைப்பான நேரத்தில் குழந்தையின் சிரிப்பு

இவை அனைத்தும் இனிமைதான் நாம்
உண்மையான மனிதானாக இருந்தால்

Sunday, July 18, 2010

முழுமை

தலைவனின் முழுமை
நாட்டைச் செழுமையாக வழிநடத்துவது

தந்தையின் முழுமை
குடும்பத்தைச் சீராக நடத்துவது

தாயின் முழுமை
குழந்தைகளைச் சீராக வளர்ப்பது

உறவுகளின் முழுமை
இன்பத்திலும் துன்பத்திலும் ஒன்றாய்இருப்பது

நட்பின் முழுமை
இக்கட்டான நேரத்தில் கைகொடுப்பது

துறவறத்தின் முழுமை
இறைவனை முழுமையாக அடைவது

இல்லறத்தின் முழுமை
இனிமையாக வாழ்வை நடத்துவது

கல்வியின் முழுமை
கற்காதவர்க்களுக்கு கல்வியைச் சேர்ப்பது

சட்டத்தின் முழுமை
பாமர மக்களையும் வாழவைப்பது

கொடையின் முழுமை
இல்லாதவர்களுக்குப் போய் சேருவது

நம்பிக்கையின் முழுமை
நம்முடைய நோக்கத்தில் வெற்றியடைவது

வாழ்வின் முழுமை
மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருப்பது

மனிதத்தின் முழுமை
மனித நேயத்துடன் செயல்படுவது

முரண்பாடுகள்

கையூட்டுக்கு எதிராக சட்டம் இயற்றும்
கையூட்டு வாங்கும் அரசியால்வாதிகள்

நீதியை நிலை நாட்டவேண்டிய நீதிபதிகள்
நிதிக்காக நீதியை விற்ப்பது

சட்ட நுணுக்கங்களைக் கற்ற வழக்கறிஞர்கள்
சட்டத்தைச் சுயஇலாபத்துக்காக மீறுவது

சட்டத்தைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையினர்
சட்டத்தை பணம்படைத்தவர்களுக்காக மாற்றுவது

கல்வி கற்று கொடுக்கும் ஆசிரியார்கள்
காமத்திற்காக மாணவர்களைப் பயன்படுத்துவது

ஆன்மீகத்தைப் போதிக்க வேண்டிய ஆன்மீகவாதிகள்
ஆன்மீகத்தின் ஆணிவேரை அறுப்பது

துறவறம் ஏற்ற துறவிகள்
துன்பமாக பக்தர்களுக்கு மாறுவது

பகுத்தறிவு பேசும் பகுத்தறிவுவாதிகள்
பண்பாட்டைக் காற்றில் பறக்கவிடுவது

தொழிலாளர்களின் நலனுக்காக போராடும்
தோழர்கள் முதலாளித்துவத்திடம் அடிபணிவது

கலாச்சாரத்தைப் பிரதிபலிக்ககூடிய திரைப்படம்
கலாச்சாரத்தை வீணாக சீரழிப்பது

இந்த உலகத்தின் முரண்பாடுகளைப் பார்த்து
இன்னல்களைச் சந்திக்கும் பொதுமக்கள்

Wednesday, July 14, 2010

புலி

இந்தியாவின் தேசிய விலங்கு புலி
ஆனால் புலியைக்கண்டால் பயம்

இங்கு புலியை வேட்டையாடினால் தண்டனை
ஆனால் அங்கு வேட்டையாடினால் பரிசு

இங்கு புலியைக் காக்க சரணாலயம்
ஆனால் அங்கு முள் வேலி

இங்கு புலி பாதுகாப்பிற்கு வனத்துறை
ஆனால் அங்கு அழிப்பதற்கு நமது இராணுவம்

உலகுக்குத் தெரியும் பதுங்கும் புலி
ஆளும் அரசாக மாறும் என்று.