Tuesday, December 7, 2010

தலைவர் வாழ்த்து! தமிழ் வாழ்த்து!!




நெல் ஆடிய காவிரிகரையில்
வில் ஆடிய களத்தில்
சொல் ஆடிய சோழ மண்டலத்தில்
வீர குழந்தை பிறந்தது - அது
தாய் மொழிக்கே பெயர் சூட்டும்
தாயக பிறந்தது -தேனினும் இனிய
தமிழாக பிறந்தது - தாழ்த்த பட்டவர்களுக்கு
தந்தையாக பிறந்தது - தமிழினத்தின்
தலைமகனாக பிறந்தது - சூத்திரனுக்கு
சூத்திரமாக பிறந்தது - தமிழுக்கு
தொண்டனாக பிறந்தது - உழைப்புக்கு
ஊற்றாக பிறந்தது- திராவிடத்தின்
திரவியமாக பிறந்தது - பகுத்தறிவின்
பாலமாக பிறந்தது - பெரியாரின்
பொறியாக பிறந்தது - அண்ணாவின்
அன்பாக பிறந்தது - வள்ளுவனின்
வடிவமாக பிறந்தது - பாரதிதாசனின்
பாடலாக பிறந்தது - கண்ணதாசனின்
கவிதையாக பிறந்தது - கழகத்தின்
சூரியனாக பிறந்தது - உடன்பிறப்புகளுக்கு
உயிராக பிறந்தது!

பலகலைகழகம் சென்று படித்தவன் இல்லை -நீ
பலகலைகழகங்கள் உன்னை இன்று படிக்கின்றன


காமராஜர் ஏற்றிய கல்வி ஒளியை
கடுகளவும் குறையாவிடாமல்
காத்த பணியாளன் -நீ


தண்ணீருக்கே தாகமா என்று
வியக்கும் அளவுக்கு செந்தமிழை
ரசிக்கும் தமிழ்த்தேனி -நீ

வரலாறு தெரியாத காகங்கள்
கரையும் பொழுது கனிவுடன்
வரலாறு கூறி திருத்தும் பண்பாளன் -நீ

இக்கட்டான சூழ்நிலையிலும்
நகைச்சுவை புரியும்
சமையோதின நாயகன் -நீ

தமிழ் படங்கள் ஆரியத்தில்
தத்தளிக்கும்போது பராசக்தியாக
நெருப்பூட்டிய புதுமைபித்தன் - நீ


கழகத்தில் சிறு கழகங்கள்
ஏற்ப்படும் பொழுத்து கனிவுடன்
கையாளும் குயவன் - நீ


தமிழனத்திற்க்கு ஒன்றென்றால்
தன்னையே கொடுக்க வரும்
முதல்வன் -நீ


குறளை கடைந்தெடுத்த
கயவன் -நீ


கவிதை ஊற்றென பொழியும்
கற்பனையாளன் -நீ


கர கர குரலினால் இளையோரை
ஈர்த்த கள்வன் -நீ


முத்தமிழின் இனிமையை
உணர்த்திய இனியவன் -நீ


தீந்தமிழ் மீது
தீராத பற்றுகொண்ட காதலன் -நீ


மூத்தகுடி தமிழ் குடியின்
முதியவன் -நீ

சிந்தனையாளர்களின் தலைவன்- நீ

உழைப்பினால் ஓய்வுக்கு ஓய்வு
கொடுக்கும் இளைஞன் -நீ


அறுபது ஆண்டுகளுக்கும்
மேலாக தமிழகத்தின்
தலைப்புசெய்தி -நீ

ஆளும்கட்சியாக இருந்தாலும்
எதிர்கட்சியாக இருந்தாலும்
வில்லாக அம்பாக வரும்
விமர்சனங்களை தாங்கிய பீமன் -நீ

தமிழகத்தில் இரண்டே நிலைதான்
உன்னை கண்மூடித்தனமாக - எதிர்ப்பவர்கள்
உன்னை கண்மூடித்தனமாக - ஆதரிப்பவர்கள்

பல பத்திரிக்கைகள் உன்னால்தான்
பிழைப்பு நடத்துகின்றன


உன் துண்டு நிறம் மாறினும்
உன் தொண்டின் நிறம் மாறவில்லை


உன் கால்கள் தளர்ந்தாலும்
உன் தடம் மாறவில்லை


உன் பெருமை பற்றி பாட
உன்னருகில் கவிஞர்கள் இருக்கலாம்
உன் அருமை சொல்ல
உன்னருகில் அறிஞர்கள் இருக்கலாம்

ஆனால்
என்னை போன்ற உடன் பிறப்புகள்
உனக்கு காட்டிய நன்றி என்ன?

கழகத்தை ஐந்து முறை
ஆட்சியில் அமர்த்தியதும்
தோல்வியை உன்னை நெருங்க
விடாமல் துரத்தியதும்

என் தாத்தா காலத்திலும் முதலமைச்சர் -நீ
என் காலத்திலும் முதலமைச்சர் -நீ
என் பேரன் காலத்திலும்
முதல்வராய் வாழி நீ பல்லாண்டு !


No comments:

Post a Comment