
நெருப்பே !
உனக்குள் உயிர் இல்லாததால் - இந்த
பிஞ்சுகளின் உயிரை கரியக்கிவிட்டயா
உனக்குத்தான் அறிவில்லையே
நீ என்ன செய்வாய் - அதற்கு
நாங்கள் என்ன செய்வது?
உனக்கு உலகத்தில் -இந்த
குழந்தகைள் தான் கிடைத்தா?
பிஞ்சுகளின் உழைப்பில் வாழும்
பித்தலாட்டகாரர்களை விட்டுவிட்டு
ஏன் இந்த சிறு குஞ்சுகளை எரித்தாய்?
மொட்டுகளே!
மகாமகத்தில் நாங்கள் கரைத்த
எங்கள் பாவங்கள் எல்லாம்
உங்கள் மீது படிந்து விட்டதோ அய்யகோ!
மரணமே!
நாட்டில் அடுத்தவர்கள் உழைப்பை
சுரண்டிவாழும் கயவஞ்சவர்களை
விட்டுவிட்டு உஎன் இந்த
துள்ளி விளையாடும்
துளிர்களை சுட்டெரித்தாய்
கடவுளே!
இந்த அரும்புகள் கதறியது -உன்
காதில் விழவில்லையா?
மலர்களின் மரண ஓலம் -உன்
மனதை கரைக்கவில்லையா?
உனக்கு அழிக்கவும் தெரியும்
என்று அழித்துவிட்டாய - இல்லை
நீ பிறந்தது என்ன இலங்கையா?

No comments:
Post a Comment