Monday, December 13, 2010

ஒற்றுமை


எங்கள் வலிமை புரியாமல்
நீண்ட நாள் பிரிந்து இருந்தோம்
காலத்தின் கடமை தெரியாமல்
காலம் கடத்தி வந்தோம்

மற்றவர்களின் துன்பத்தை
இன்பமாய் ரசித்து வந்தோம்

நல்லவேளை நமக்குப் பிரச்சினை இல்லை
என்று நீண்ட நாள் ஒதுங்கி இருந்தோம்

நமக்கு ஏன் தேவை இல்லாத வேலை
உண்டு உறங்கி வந்தோம் மிருகங்கள் போல

நாட்டைக் கரையான் அரிக்கிறதா
ஊரை அட்டைப் பூச்சி உறிஞ்சிகிறதா
நமக்கென்ன உணவு கிடைக்கிறதா என்றிருந்தோம்

சேவல் கூவினாலும் கூவாவிட்டாலும்
பொழுது விடிந்துவிடும் என்று
இன்னும் தூங்கிக்கொண்டு இருக்கின்றோம்

ஒர் உயிர் துடித்தது இந்த
இந்த மானிடத்தின் நிலை நினைத்து
ஊழலின் அகாங்காரத்தைப் பார்த்து

தன உயிரை மாய்த்து மக்களுக்கு
உணர்த்தியது உணர்வோடு இருங்கள்
ஒற்றுமையாய் இருங்கள் என்று.

No comments:

Post a Comment