Tuesday, December 10, 2013

கருப்பு வைரத்துக்கு கண்ணீர் அஞ்சலி


இருண்ட கண்டத்தில் உதித்த -உதய சூரியனே
இரும்புத்திரையை உடைத்தெழுந்த கதிரே!

பழங்குடி இனத்தில் பிறந்த -பகலவனே
பலமான நிற வெறியர்களை  சுட்டெரித்த சுடரே!

அடிமையின் இருளை அகற்ற வந்த-அகல் விளக்கே
அகங்கார வெள்ள இனத்தை கருக்கிய நெருப்பே

அறப் போராட்டத்தில்   தொடங்கி
ஆயுதப் போராட்டத் தலைவனாக நின்றவன் நீ!

தன்  இன மக்கள் விடுதலைக்காக - சிறையில்
தன்னையே உருக்கிகொண்ட மெழுகுவர்த்தி நீ!

மன்னிப்பை கேட்டு விடுதலை பெறுவதை விட
மரணமே போதும் என்ற மன உறுதியாளன்  நீ!

உலக தலைவர்களுக்கெல்லாம்
உன்னத தலைவன் நீ !

உலக  போராளிகளுக்கெல்லாம்
உதாரணம் நீ !

பூர்விக குடியின் புதல்வன் நீ !
பூலோகமே போற்றும் கருப்பு வைரம் நீ !

அமைதியின் வடிவம் நீ !
அன்பின் தோற்றம் நீ !

உன்னைக் கட்டித்தழுவத் துடிக்கின்றோம்.
என்ன செய்வது எங்களை விட்டு பிரிந்து விட்டாய்  நீ!

மேகங்களிடம் எங்கள் கண்ணீரை காணிக்கையாக
அனுப்பியுள்ளோம் பெற்றுக்கொள்!!.

No comments:

Post a Comment