Wednesday, October 2, 2013

குறுகிய வாழ்க்கை


காலம் வேகமாக கடந்து செல்கிறது
பிறப்புக்கும் இறப்புக்கும் இடையிலான
பயணத்தில் ஓடிக்கொண்டு  இருக்கின்றோம்
மரணம் எப்படியும் நேரிடலாம்

வறியவர்களிடம் வஞ்சகம் செய்யாதே
பாமரர்களிடம்  சுரண்டி தின்னாதே
எளியவரிடம்  கவுரவும் பார்க்காதே
பெண்களிடம் வன்கொடுமையில் ஈடுபடாதே

அன்பு என்னும் தேன் வேண்டுமா?
மகிழ்வு  என்னும்  கனி வேண்டுமா?
உறவு என்னும் பால் வேண்டுமா?
அனைத்தையும் அள்ளி பருகு

உலகம் சுற்றிக்கொண்டிருக்கிறது
மரணம் நெருங்கி கொண்டிருக்கிறது
இடைக்காலத்தை போலியாக கழிக்காதே
மற்றவர்களை பற்றி புரணி பேசாதே

மனித நேய மான்பு செய்வோம்
பெருமை கொள்வோம்!
பொய்யர்களிடம் ஒதுங்கி நிற்ப்போம்
போலிகளை பொறமை கொள்ள வைப்போம்

அறம் செய்வோம், நாம் அனுபவிப்போம்!
உதவி செய்வோம், வாரி வழங்குவோம்!!
அடுத்தவர்களிடம் இருந்து உயர்ந்து இருப்போம் !!!
வாழ்வை மகிழ்வாக களிப்போம் !!!!

2 comments:

  1. நேரிய சிந்தனையுடன் கூடிய
    அற்புதமான படைப்பு
    பகிர்வுக்கும் தொடரவும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நன்றிகள் அய்யா

    ReplyDelete