Wednesday, November 6, 2013

ஆலயம்


விண்ணை முட்டும் கோபுரங்கள்
மனதில் வினைகள்

பக்தி ஊட்டும்  மறையுரைகள்
வெளியே பொய்யுரைகள்

பரவசம் மூட்டும் பாடல்கள்
கொடூர எண்ணங்கள்

சேவை பற்றி போதனைகள்
வியாபார நோக்கங்கள்

அன்பை வெளிபடுத்தும் வார்த்தைகள்
அருவருப்பான செயல்கள்

கடவுளே உன் ஆலயத்தின்
புனிதம் இதுதானா இன்னும்
நீ மௌனம் காப்பது ஏன்?

No comments:

Post a Comment