Thursday, February 20, 2014

அண்ணா வா



உன் இளமை பருவம் சாகடிக்கப்பட்டது
சிறை கொட்டடியில்

உன் உணர்வு நசுக்கப்பட்டது
பொய்யான எழுத்தில் - ஆனால்

உன் திறமையை எல்லா பாதுகாப்புள்ள
சிறை மதில்களாலும் தடுக்க முடியவில்லை

உன் அறிவை எந்த காவல் படையினராலும்
முடக்க முடியவில்லை

நீ புற உலகத்தை பார்த்து
பல ஆண்டுகள் ஆகிறது

நீ சிறையில் இருந்து உலகத்தின்
வளர்ச்சிக்கு ஏற்ப உன்னை
தயார் செய்து கொண்டாய்

நீ கம்பிகளுக்கு இடையில் இருந்து - கற்றாய்
கணினி அறிவியலை

இரும்பு கோட்டையை உடைத்தாய்
உன் நன்னடத்தையால்

உன் அறிவோ, நடை பிணமாய்
இருக்கும் எங்களை விட மேலோங்கியுள்ளது - பேரறிவாய்

இதை முன்னனேற அறிந்து பெயர் சூட்டினரோ
உன் பெற்றோர் பேரறிவாளன் என்று

உனக்காக உண்மையில் உயிர் தியாகம்
செய்தவர்கள் உண்டு

உன்னை நினைத்து தினமும்
அழுதவர்கள் உண்டு

உன்னை வைத்து ஓட்டு அரசியல்
செய்தவர்களும் உண்டு

பொருத்திருந்தால் உலகத்தையும்
தன்வசபடுத்தலாம் என்ற வள்ளுவரின்
வார்த்தைக்கு ஏற்ப வாழ்ந்த
நம் தலைவர்கள் போல

கொள்ளை கூடாரத்தின் தலைநகரான
உருகுவே நாட்டின் அதிபர் ஜோஸ் முஜிகா
வறுமையில் வாடும் தன் மக்களுக்காக
17 வருடம் தனிமை சிறையில் கழித்தார்
வறுமையை போக்கினார்

கருப்பு சூரியன் கறுப்பின மக்களின்
வெண்மைக்காக வெள்ளை ஆதிக்கத்தை
எதிர்த்து போராடினார் நெல்சன் மண்டேலா
27 வருடம் தனிமை சிறையில் கழித்தார்
இருளை  ஒளியாக்கினர்

சர்வாதிகாரத்தில் இருந்து பர்மா
 மக்களை மீட்டெடுக்க ஆங்க் ஹான் சு கி
17 வருடம்  சிறையில் கழித்தார்
மக்கள் மன்றத்திற்கு வழிவகுத்தார்

மறுக்கபட்ட நீதிக்காக
மக்களின் வாழ்க்கைக்காக
உண்மைக்கு ஆதரவாக
செய்யாத பாவங்களுக்கு- செத்து மடியும் பாமரனுக்காக
நிதிக்காக விற்கப்படும் நீதிக்காக
மொத்தத்தில் சொன்னால்
மனித நேயத்திற்காக
23 வருடம் தனிமை சிறையை
கொடுமை வாழ்வை கழித்தாய் - எங்களுக்காக


உன் துன்பத்தில் மூலம் உணர்த்தினாய்
அறிவு பாடம்
உண்மை
மன உறுதி
நம்பிக்கை
எந்த கால நிலையிலும்
சோர்வடையாத மனம் என்ற குணத்தையும்

அண்ணா வா அரசியல்  அரியணை ஏற்க அல்ல !

எங்கள் மனதில் இருக்கும்
ஏற்ற தாழ்வு என்ற எண்ணத்தையும் !!

யார் பெரியவன் என்ற நிரந்தரம்
இல்லாத கவுரவுத்தையும் !!!

எங்கள் மனதில் ஆழமாக கரை படிந்திருக்கும்
சாதிய உணர்வையும்  !!!!

அடுத்தவர்களை பழிவாங்க
துடிக்கும் மனநிலையும் !!!!!

தமிழர்கள் நெஞ்சில்  பதிந்திருக்கும்
நச்சு என்ணத்தை போக்கும் மருந்தாக - வா
உலக நடை முறையை போதித்த வள்ளுவனாக - வா
வருங்காலத்தை எடுத்து உரைத்த பாரதியாக  - வா
தீண்டாமையை உடைத்தெறிந்த பெரியாராக  - வா
அன்பின் தீபமாக  - வா
அறிவின் இலக்கணமாக  - வா
தமிழர்களின்  மனதில் அரியணை ஏற  - வா
எங்கள் இதயம் கனிந்த அண்ணாவாக  - வா

உன்னை வரவேற்க காத்திருகின்றோம்
சிறைச்சாலை வாசலில்
விவேகானந்தர் இல்லாத இளைஞர்கள் போல- வா

உன் தம்பியாக உரிமையுடன்
அழைக்கின்றேன் - வா

வந்து எங்களின் உள்ளங்களில்
அறியாமை என்னும் இருள் அகற்றி
உண்மை என்னும் ஒளியேற்று !
தமிழர் என்னும்  உணர்வேற்று  !!

No comments:

Post a Comment