Saturday, February 14, 2009

காதல் ஒரு சாயம்.

மனம் உன்னைத் தினமும்
எண்ணம் எவ்வண்ணமும் - உன்னை
நோக்கி இருப்பதால் மறக்கின்றேன்
என்னுடைய அன்றாட பணிகளை -நீயும்
என்னைபோல் இருப்பாய் என்று

நீ எப்படி நினைக்கிறாய்
நீ என்னிடம் என்ன மறைக்கிறாய்- உள்ளம்
கேட்கிறது உதடு தடுக்கிறது
சந்தேகம் வலுக்கிறது பிரிக்கிறது -காதலை
உடைக்கிறது மனதை

எனக்கு ஒரு மரபு
உனக்கு ஒரு மரபு - எனக்கு
ஆசை உண்டு ஆனால்
உனக்கு எந்த ஆசையும் - இருக்கக்
கூடாது என்னைத் தவிர

நீ ஒரு பொம்மை
என்னைப் பார்த்து சிரிக்க வேண்டும்
கண்ணை மூட வேண்டும்
மற்றவர்களைப் பார்க்கும் பொழுது

நான் சுயநலவாதி
நான் சாதாரன மனிதன் - எனக்கு
என் மகிழ்ச்சி தான்
என் மனநிறைவு - நீ
வேண்டும் எனக்கு இந்த
வீணாய்ப் போன உலகத்தை- மறக்க
என் சுகத்தைக் கூட்ட.

ஏன் காதலிக்க வேண்டும்
உன்னுடன் சுற்றிய நேரத்தை -சரியாக
பயன் படுத்திருந்தால் நிலவின்
பாதி தொலைவைக் கடந்திருப்பேன் -உலகை
இரண்டு தடவை சுற்றியிருப்பேன்

பெண்ணுடன் தொலைபேசியில் பேசிய நேரத்தில்
சமூகத்துக்காகப் பேசியிருந்தால் -மக்கள்
பயனடைந்திருப்பார்கள் அந்த தொலைபேசி
தொகையில் ஒரு உடன்பிறப்பிற்கு -முழுமையான
கல்வி கொடுத்திருந்தக்கலாம்.

என்று போராளிகள் சொல்லும்
பொழுது போங்கடா என்று -கேலி
செய்தேன் அவர்கள் எனக்கு
போராடி பெற்று கொடுத்த - இந்த
பாது காப்பான இடத்தில் இருந்து.

பிறகு தெரிந்தது காதல்
சாயம் பூசப்பட்ட துணி -ஒரு
சலவையில் தெரிந்து விடும்
உண்மையான வண்ணம்

2 comments:

  1. Thambi, all our experiences help us to learn more about our life. You have learnt a lesson. This experience will shape your life. And your future will be bright.

    ReplyDelete