Monday, July 14, 2014

முதிர் கன்னி



இதுவரை 45 பேர்
இன்றுடன் 80 முறை - என்னை
உரசி சென்ற 50 வயதை கடந்த
முதிர் கன்னி - நான்

பங்குனி பணியிலும்
சித்திரை வெயிலிலும் - காய்ந்து
சிதைந்து இருக்கும் தேகத்தை
சீர் படுத்த ஒரு துணைக்காக
தவமிருக்கிறேன் நெடுநாளாய்

உள்ளூர் அரசியல்வாதிகளால் அவ்வப்போது தீண்டப்படும்
தீண்டத்தகாத பெண் - நான்

டெல்லி சந்தையில் விலை போகாத
அவலப்பெண் - நான்

நான் என்ன பாவம் செய்தேன்
தமிழ் பெண்ணாக பிறந்தது என் - தவறா

செங்கல்பட்டிலிருந்து கன்னியாகுமரி வரை
நீண்டு நெடுந்து வளைந்து நெளிந்து
தனியாக படுத்திருக்கின்றேன் -ஒரு வழிப்பாதையாக
என் முறை எப்போது வரும்மென்று!!

Note:
45 -Railway ministers
80 -Railway budget

No comments:

Post a Comment