Thursday, December 11, 2014

எங்கள் பாரதி



பயந்தவன் சொல்லுவான்
எல்லாம் கடவுள் செயல் - என்று
துணிந்தவன் சொல்லுவான்
பதில் சொல்லடி பராசக்தி...

கோழை  சொல்லுவான்
உடல் பலம் வேண்டுமென்று
புத்திசாலி சொல்லுவான்
மனதில் உறுதி வேண்டும்...

முட்டாள் சொல்லுவான்
மனிதத்தில் சாதி உண்டு - என்று
பகுத்தறிவுவாதி சொல்லுவான்
காக்கை குருவி எங்கள் சாதி....

அறியாதவன் சொல்லுவான்
அடிமைப்பெண் வேண்டும்  - என்று
அறிந்தவன் சொல்லுவான்
புதுமை படைக்கும் பெண் வேண்டும் .....


கோழை  சொல்லுவான்
நமக்கு ஏன் வம்பு - என்று
வீரன் சொல்லுவான்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்பது இல்லையே...
உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சமென்பது இல்லையே...

என்று சொல்லுவான் - அவன்தான்
எங்கள் பாரதி

No comments:

Post a Comment