Wednesday, August 4, 2010

ஒன்றுமே புரியவில்லை!


கருவில் இருக்கும் குழந்தை
கிழித்து தாயுடன் அழிக்கப்படுகிறது
பள்ளிச் சிறுவர்கள் கூண்டோடு
பலியாகிறார்கள் அணுகுண்டு வீசப்பட்டு

கன்னிப் பெண்களின் கற்பு
கயவர்களால் மிருகத்தனமாய்க் கலைக்கப்படுகிறது
பாமரமக்கள் முள்வேலிக்குள் பசியால்
பரிதவிக்கும் அழுகை குரல்

சிறையில் கொடூரமாய் போராளிகள்
சித்திரவதை செய்து கொல்லப்படுவது
இளையோரக்ளின் கண்களை இறுக்கிக்கட்டி
நிர்வாணமாய் சுடப்பட்டு மரணம்

இந்தச் சாவுகளின் கொடுரத்தை
ரசித்து எக்காளமாய் சிரிக்கிறது
அமைதியையும் அன்பையும் உலகுக்குப்
போதித்த புத்தனின் தேசம்

இவை அனைத்தும் நல்லது
என்று கைதட்டி சிரிக்கிறது
அகிமசையும் அறவழியயும் உலகுக்குக்
கொடுத்த காந்தி தேசம்

இதற்கு ஆதரவாய் நம்மிடையே
சில ஓநாய்கள் ஓலமிடுகின்றன
இதை ஆதாயமாய் வைத்து
ஓட்டுக்காக சில நரிகள் ஊளையிடுகின்றன

கொடுமைகளை யாரிடம் முறையிட
யார் மனிதநேயத்துடன் உண்மையாக
உதவிட செயல்படுகிறார்கள் என்று
ஒன்றுமே புரியவில்லை!

1 comment: