Thursday, August 12, 2010

மன அழுத்தம் நிறைந்த நாகரிக வாழ்க்கை



"திரை கடல் ஓடியும் திரவியம் தேடு " என்பது முன்னோர் வாக்கு. அதற்காக மக்கள் தங்களுடைய சொந்த வாழிடங்களை விட்டு உலகின் பல்வேறு நாடுகளுக்கும் , நாட்டின் பல்வேறு நகரங்களுக்கும் குடிபெயர்ந்து செல்கின்றனர். ஆனால் அவர்களால் அந்த செல்வத்தை வைத்து கொண்டு மிகவும் மகிழ்ச்சியாக வாழ முடிகிறதா என்றால் அது ஒரு கேள்விக் குறியாகத்தான் இருக்கும்.

பொதுவாக நம்முடைய வாழ்க்கை முறை கூட்டுக் குடும்பமாக, உறவினர்களோடு ஒன்று பட்டு , சமுதாயத்தோடு சேர்ந்து வாழும் முறையில் நம்முடைய கலாச்சார அமைப்பு உள்ளது. இப்படிப் பட்ட சூழ்நிலையில் நாம் வாழும் போது நம்முடைய சுமைகளை , நம்முடைய இன்ப துன்பங்களைப் பகிர்ந்துகொள்ள , நம்முடைய வேலைப்பளுவைக் குறைக்க நம்முடையே நம் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நம்முடைய உறவினர்கள் இருந்தார்கள். இந்த வாழ்க்கை முறையில் நம்முடைய முழுத்தேவைகளும் கிடைக்கவில்லை என்றாலும் அதிக மன அழுத்தம் இல்லாமல் இருந்தார்கள். இந்த கலாச்சார வாழ்க்கையில் சமுதாயத்தில் மனிதர்களுக்கு மதிப்பு கொடுத்தோம்.

ஆனால், இன்றைய மாயத்தோற்றம் நிறைந்த இந்த நாகரிக வாழ்க்கையில் வாழ்ந்து நமது மன அழுத்தத்தை அதிகப் படுத்துகின்றோம். நாகரீக வாழ்க்கை என்ற போர்வையில் வாழ்ந்து கொண்டு பிறர் நம்மை குறைவாக நினைத்து விடக்கூடாது என்று நமையே நாம் வருத்திக் கொண்டு விரக்த்தியின் உச்சிக்கே சென்று பரிதவித்து கொண்டு இருக்கின்றோம். அடுத்தவர்களை மேலோட்டமாக பார்த்து இவர்கள் நன்றாக இருக்கின்றார்களே என்று நினைத்து மனதைக் கசக்குகிறோம் , அவர்களும் நம்மை போல் நாகரிக வாழ்க்கை என்ற போர்வையில் மாட்டி கொண்டு தவிகின்றார்கள் என்று புரிந்து கொள்ளாமல். மனித வாழ்க்கை இன்று மன அழுத்தம் நிறைந்ததாகவும், மன நிறைவற்றவதாகவும் இருக்கிறது, என்பதற்கு நமுடையே இருக்கும் போட்டிகளும் , பொறாமைகளுமே , தற்கொலைகளும், விவாகரத்துகளும், வெறுப்பும்,இரவில் தூக்கம் இல்லாமையும் இதற்க்கு உதாரணமாக இருக்கின்றது.
மன அழுத்தத்தில் இருந்தது விடு பட மக்கள் கேளிக்கை விடுதிகளிலும் , மதுபானக் கூடத்திலும் பணத்தை விரயம் செய்து சிற்றின்பங்களைத் தேடி அலைந்து வாழ்க்கையை வீணாக்குன்றார்கள். இந்த நாகரிக வாழ்க்கையில் மனிதர்களை நம்புவதை விடப் பணத்தையே பெரிதாக நம்புகிறார்கள்.

இந்த நாகரீக வாழ்கையில் நாம் உண்மையான உணர்வுகளைப் புரியாமல் போலியாக மாறுகின்றோம். இதன் காரணமாகத்தான் போலிச் சாமியார்களும் , போலி ஆன்மிகவாத்திகளும் உருவாகி நாட்டைச் சீரழிக்கின்றார்கள். பிற நாட்டவர்களும் வியந்து பாராட்டும் நம்முடையக் நாட்டு கலாச்சாரத்தை நாம் மறந்து , நுகர்வுக் கலாச்சாரத்தால் நம்முடைய தனித்தன்மையை இழந்தது வாழ்வையும் இழந்து கொண்டு இருக்கின்றோம்.

திரை கடல் ஓடியும் திரவியம் தேடிவிடலாம் எங்கே சென்று உறவுகளைத் தேடுவது?, எங்கே சென்று அன்பைத் தேடுவது?, எங்கே சென்று மன நிமதியைத் தேடுவது?, பணம் என்பது நமது வாழ்கையில் நம் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஒரு அங்கமாகவே இருக்க வேண்டும். நம்முடைய மன அழுத்தத்தைக் குறைக்க நம்முடைய போலியான நாகரிக வாழ்கையை உதறிவிட்டு, குடும்பத்துடன் , உறவுகளுடன் , நண்பர்களுடன் நம்முடைய குறைவை , நிறைவை , துயவுர்களைப் பகிர்ந்து கொள்வதே இதற்குத் தீர்வு!

5 comments:

  1. //பணம் என்பது நமது வாழ்கையில் நம் தேவைகளை பூர்த்தி செய்யும் ஒரு அங்கமாகவே இருக்க வேண்டும்.// Correct.

    ReplyDelete
  2. நல்ல பதிவு.
    உடனே நீங்களும் நானும் செய்ய வேண்டியது, ராஜகோபலபெரி அல்லது வீரகேரளம் புதூர் வங்கியில் கடன் வாங்கி, எட்டு பசு மாடு வாங்கி பால் வியாபாரம் செய்வோம் அல்லது நாலு ஏக்கர் நிலம் வாங்கி வாழை நெல்லு பயிரிடுவோம்

    (pls remove word verification, else you wont get more comments & votes)

    ReplyDelete
  3. Ungaludaya karuthu sariyanavaithan anal
    indraya kaala kattathil vazhum makkal selvathaiyum uravogalayum marapadu illai.palveru nagarangalil kudiyerinalum
    inraya technology muliyamaga uravogaludan uraiyadi tan barathai kuraipadu undu.(ore idathil irudu kupai kottuvathai vida pala idagalil sendru pizhaipathu seri enpadu enudaya karuthu.

    ReplyDelete
  4. Ungaludaya karuthu sariyanavaithan anal
    indraya kaala kattathil vazhum makkal selvathaiyum uravogalayum marapadu illai.palveru nagarangalil kudiyerinalum
    inraya technology muliyamaga uravogaludan uraiyadi tan barathai kuraipadu undu.(ore idathil irudu kupai kottuvathai vida pala idagalil sendru pizhaipathu seri enpadu enudaya karuthu.

    ReplyDelete
  5. Ungaludaya karuthu sariyanavaithan anal
    indraya kaala kattathil vazhum makkal selvathaiyum uravogalayum marapadu illai.palveru nagarangalil kudiyerinalum
    inraya technology muliyamaga uravogaludan uraiyadi tan barathai kuraipadu undu.(ore idathil irudu kupai kottuvathai vida pala idagalil sendru pizhaipathu seri enpadu enudaya karuthu.

    ReplyDelete