Sunday, August 29, 2010

கருணைக்கு நூற்றாண்டு விழா




பாலின் வெண்மையினும் வெண்மையான உள்ளம்
குழந்தையின் தூய்மையினும் தூய்மையான உள்ளம்
அரவணைக்கும் அன்னை உள்ளம்
பரிவு தரும் தந்தை உள்ளம்
புனித உள்ளம் கருணை உள்ளம்

அவர் மார்போடு ஆதரவு அற்றவர்களை
அரவணைக்கும் மனித நேயத்தில்
நாமும் தோற்று வெட்கி தலை குனிவோம்
நம் சொந்தங்களை கைவிட்டதை நினைத்து

கண்கள் கலங்கிடும் இதயம் பட படத்திடும்
நோய்யொன்று, வறுமையொன்று அடித்தட்டு
மக்களைத் தீண்டுது என்றால் அவர் பிரிந்தாலும்
புனிதப்பயணமும் , செய்யும் அற்புதங்களும் நிற்காது

கையில் எச்சில் உமிழ்ந்து இகழ்பவர்களிடம்
அவர்காட்டும் கருணை தலை நாணச் செய்துவிடும்

எளியவர்களிடமும் , வறியவர்களிடமும்,
சாதாரண மக்களிடமும் அவர்காட்டும் காட்டும் தாழ்வு
வீணான தற்பெருமை பேசுபவர்களைச் சிந்திக்க செய்யும்

உலகெங்கும் சண்டைகளும் , சச்சரவுகளும்
மனித தன்மையற்ற செயல்களும், கொலைகளும்
கற்பழிப்புகளும், அடிமைத்தனங்களும், வறுமையும்
மனித பாவங்களும், குற்றங்களும் அதகரித்த தருணத்தில்

மீண்டும் இறைவன் பிறக்க வேண்டும்
என்று அடித்தட்டு மக்கள் நினைத்த நேரத்தில்
யூகோஸ்லோவியாவில் ஒரு குழந்தை பிறந்ததது
நம் அன்னையாக கருணை தெய்வமாக

நீ திகழ்ந்தாய் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக
நீ நடந்தாய் மற்றவர்களுக்கு எடுத்துகாட்டாக
நீ வாழ்ந்து காட்டினாய் மனித நேயம் உடையவராக
நீ இருந்தாய் உண்மையாக , நேர்மையாக , புனிதமாக

தொழுநோயாளிகளிடம் நீ காட்டிய -அன்பு
மனிதன் கொடுக்க முடியாத கடவுளின் அன்பு

நோயாளிகளிடம் நீகாட்டும் -கருணை
உன்னை இகழ்பவர்களிடம் நீகாட்டும் -பரிவு
மற்றவர்களிடம் நீகாட்டும் -தாழ்மை
மனிதன் செய்ய முடியாத இறைவனின் செயல்

நீ பிறந்த இந்த உலகமும்
நீ வாழ்ந்த இந்த தேசமும்
நீ பழகிய இந்த சமுதாயமும்
உனக்கு நூற்றாண்டு விழா எடுக்கின்றது
உன் வழி, நெறிகளைப் பின்பற்றாமல்

2 comments:

  1. //நீ பிறந்த இந்த உலகமும்
    நீ வாழ்ந்த இந்த தேசமும்
    நீ பழகிய இந்த சமுதாயமும்
    உனக்கு நூற்றாண்டு விழா எடுக்கின்றது
    உன் வழி, நெறிகளை பின்பற்றாமல் //
    உண்மைதான்.
    இல்லை என்றால் இந்தியா என்றோ எழைகளற்ற நாடாகியிருக்கும்.

    ReplyDelete
  2. Superb Words... thats why She is a saint.

    ReplyDelete